<p><br />"பாலகணபதி, பக்தி கணபதி, வீர கணபதி" - அப்பப்பா... எத்தனை கணபதி</p>
<p> </p>
<p>1. முதலாவதாக நாம் பார்க்க இருப்பது ”பாலகணபதி”...</p>
<p>உருவத்தில் குழந்தை போல காட்சியளிக்கும் இவர், சிவந்த நிறத்தில்... கையில் வாழைப்பழம், பலாப்பழம், கரும்பு, மாம்பழம் ஆகியவற்றை தன் ’நான்கு’ கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கிறார்...</p>
<p>2. தருண கணபதி</p>
<p>கையில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம், மோதகம், விளாம்பழம், நெற்கதிர்கள், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரத்தில் ஏந்தியவர், சிவப்பு நிற திருமேனியோடு நமக்கு காட்சி அளிக்கிறார்...</p>
<p>3. பக்தி கணபதி</p>
<p>வெண்ணிற மேனியோடு நமக்கு காட்சி அளிக்கும் பக்தி கணபதி தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயாசக் கிண்ணம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் வைத்திருப்பவராக அமர்ந்திருக்கிறார்... </p>
<p>4. வீர கணபதி:</p>
<p>வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியவாரு காட்சியளிக்கும் வீர கணபதி, சிவந்த திருமேனியை உடையவர்... </p>
<p>5. சக்தி கணபதி :</p>
<p>மஹா சக்தியை உடையவரான சக்தி கணபதி... சிவந்த நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். </p>
<p><br />6. துவிஜ கணபதி :</p>
<p>தன் திருக்கரங்களில் அட்சமாலை, புத்தகம், தண்டம், கமண்டலம், ஆகியவற்றை ஏந்தியவராக இருப்பவர் நம் துவிஜ கணபதி, 4 முகங்களுடன் வெண்மையான திருமேனியை உடையவாராக நமக்கு காட்சி அளிக்கிறார்... </p>
<p>7. சித்தி கணபதி :</p>
<p> தன் துதிக்கையில் மோதகத்தை ஏந்தியவராக, பசுமையுடன் பொன் நிறம் கலந்த சித்தி விநாயகர், பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்... </p>
<p>8. உச்சிஷ்ட கணபதி :</p>
<p>பெண்ணின் திருமேனியில் தன் துதிக்கையை வைத்து காட்சியளிக்கும் உச்சிஷ்ட கணபதி, நீல நிறமுடையவர். இரண்டு கரங்களில் நீலோத்பவ மலர்களும், மற்றதில் மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியவர் 6 கரங்களை உடையவர்... <br /> </p>
<p>9. விக்ன கணபதி :</p>
<p> சக்கரம், சங்கு, கோடாரி, கரும்பு வில், புஷ்ப பாணம், ஒடிந்த தந்தம், பாணம், பூங்கொத்து, புஷ்ப பாணம், மாலை, பாசம், ஆகியவற்றை தன் 10 திருக்கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கும் விக்ன கணபதி, பொன்னிற திருமேனியை உடையவர்.... </p>
<p>10. ஷிப்ர கணபதி :</p>
<p> ஷிப்ர கணபதி ஒடிந்த தந்தம், பாசம், கற்பகக் கொடி, அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தியவராக... ரத்ன கும்பத்தை துதிக்கையில் வைத்து, சிவந்த மேனியை உடையவராக நமக்கு காட்ச் அளிக்கிறார்... </p>
<p>11. ஹேரம்ப கணபதி :</p>
<p> ஹேரம்ப கணபதி தனது 10 கரங்களில் இரண்டு கரத்தில் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையோடும்,மீதமுள்ள கரங்களில் பரசு, பாசம், தந்தம், சம்மட்டி, மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவர் ஐந்து முகங்களை கொண்டவராக நமக்கு காட்சி அளிக்கிறார்... </p>