அப்பப்பா... எத்தனை கணபதி...!!!

3 months ago 5
ARTICLE AD
<p><br />"பாலகணபதி, பக்தி கணபதி, வீர கணபதி" - அப்பப்பா... எத்தனை கணபதி</p> <p>&nbsp;</p> <p>1. முதலாவதாக நாம் பார்க்க இருப்பது &rdquo;பாலகணபதி&rdquo;...</p> <p>உருவத்தில் குழந்தை போல காட்சியளிக்கும் இவர், &nbsp;சிவந்த &nbsp;நிறத்தில்... &nbsp;கையில் வாழைப்பழம், &nbsp;பலாப்பழம், கரும்பு, மாம்பழம் ஆகியவற்றை தன் &rsquo;நான்கு&rsquo; கரங்களில் &nbsp;ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கிறார்...</p> <p>2. தருண கணபதி</p> <p>கையில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம், &nbsp;மோதகம், விளாம்பழம், நெற்கதிர்கள், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரத்தில் ஏந்தியவர், சிவப்பு நிற திருமேனியோடு நமக்கு காட்சி அளிக்கிறார்...</p> <p>3. பக்தி கணபதி</p> <p>வெண்ணிற மேனியோடு நமக்கு காட்சி அளிக்கும் பக்தி கணபதி தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயாசக் கிண்ணம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் வைத்திருப்பவராக அமர்ந்திருக்கிறார்...&nbsp;</p> <p>4. வீர கணபதி:</p> <p>வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை &nbsp;தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியவாரு காட்சியளிக்கும் வீர கணபதி, சிவந்த திருமேனியை உடையவர்...&nbsp;</p> <p>5. சக்தி கணபதி :</p> <p>மஹா சக்தியை உடையவரான சக்தி கணபதி... சிவந்த நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார். &nbsp;பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார்.&nbsp;</p> <p><br />6. துவிஜ கணபதி :</p> <p>தன் திருக்கரங்களில் அட்சமாலை, புத்தகம், தண்டம், கமண்டலம், &nbsp;ஆகியவற்றை ஏந்தியவராக இருப்பவர் நம் துவிஜ கணபதி, 4 முகங்களுடன் வெண்மையான திருமேனியை உடையவாராக நமக்கு காட்சி அளிக்கிறார்...&nbsp;</p> <p>7. சித்தி கணபதி :</p> <p>&nbsp;தன் துதிக்கையில் மோதகத்தை ஏந்தியவராக, &nbsp;பசுமையுடன் பொன் நிறம் கலந்த சித்தி விநாயகர், &nbsp;பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...&nbsp;</p> <p>8. உச்சிஷ்ட கணபதி :</p> <p>பெண்ணின் திருமேனியில் தன் துதிக்கையை வைத்து காட்சியளிக்கும் உச்சிஷ்ட கணபதி, &nbsp;நீல நிறமுடையவர். இரண்டு கரங்களில் நீலோத்பவ மலர்களும், மற்றதில் மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியவர் 6 கரங்களை உடையவர்... &nbsp;<br />&nbsp;</p> <p>9. விக்ன கணபதி :</p> <p>&nbsp;சக்கரம், சங்கு, கோடாரி, கரும்பு வில், புஷ்ப பாணம், ஒடிந்த தந்தம், பாணம், பூங்கொத்து, புஷ்ப பாணம், மாலை, பாசம், ஆகியவற்றை தன் 10 திருக்கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கும் விக்ன கணபதி, பொன்னிற திருமேனியை உடையவர்....&nbsp;</p> <p>10. ஷிப்ர கணபதி :</p> <p>&nbsp;ஷிப்ர கணபதி &nbsp;ஒடிந்த தந்தம், பாசம், கற்பகக் கொடி, அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தியவராக... ரத்ன கும்பத்தை துதிக்கையில் வைத்து, சிவந்த மேனியை உடையவராக நமக்கு காட்ச் அளிக்கிறார்...&nbsp;</p> <p>11. ஹேரம்ப கணபதி :</p> <p>&nbsp;ஹேரம்ப கணபதி தனது 10 கரங்களில் இரண்டு கரத்தில் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையோடும்,மீதமுள்ள கரங்களில் பரசு, பாசம், தந்தம், சம்மட்டி, மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவர் ஐந்து முகங்களை கொண்டவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...&nbsp;</p>
Read Entire Article