Video: கவிதையாக வரிகளை சொல்லி அட்டாக் செய்த சசி தரூர்..புன்முறுவல் செய்த நிர்மலா சீதாராமன்

8 months ago 5
ARTICLE AD
<p>காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மக்களவையில் இன்று உரை நிகழ்த்துகையில் பாஜக கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறைகளை விமர்சித்தார். அப்போது கவிதை ரீதியாக வரிகளை குறிப்பிட்டு, மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்படுகிறது என விமர்சித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p> <p>அவர் குறிப்பிட்டதவாவது,</p> <p><em><strong>&ldquo;எங்கள் பெட்ரோலுக்கு வரி, </strong></em></p> <p><em><strong>எங்கள் சட்டைக்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் காலணிக்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் மொபைலுக்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் அழைப்புகளுக்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் சம்பளத்திற்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் பயணத்திற்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் மிட்டாய்களுக்கு வரி,</strong></em></p> <p><em><strong>எங்கள் துக்கத்திற்கு வரி, </strong></em></p> <p><em><strong>எங்கள் மகிழ்ச்சிக்கு வரி,</strong></em></p> <p>எங்கள் எதிர்காலத்திற்கும் ஆண்டு தோறும் வரி,&rdquo; என்று வரி குறித்தான கவலைகளை கவிதை நயம் போல பேசினார்.</p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">My little homage in light verse today to our tax regime: &ldquo;When we ask you to fix it/ you point and say, You will be Viksit!&rdquo;<a href="https://twitter.com/hashtag/FinanceBill2025?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FinanceBill2025</a> <a href="https://t.co/5E7nw2BiB9">pic.twitter.com/5E7nw2BiB9</a></p> &mdash; Shashi Tharoor (@ShashiTharoor) <a href="https://twitter.com/ShashiTharoor/status/1904130694844142025?ref_src=twsrc%5Etfw">March 24, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>இதை தொடர்ந்து, ஈட்டப்படும் வரி வருவாய்கள் எவ்வாறு பயன்படுத்துப்படுகின்றன என்றும் சசி தரூர் கவிதை நயத்துடன் கேள்வியையும் மற்றும் விமர்சனங்களையும் வைத்தார்.</p> <p>&ldquo;<strong>ஜிஎஸ்டி, வருமான வரி படிவங்கள் குவிந்து கிடக்கின்றன,</strong></p> <p><strong>செஸ் வரி மற்றும் கூடுதல் வரி கட்டணம் நம்மை பெருமூச்சு விட விடுகின்றன,</strong></p> <p><strong>&nbsp;பள்ளங்களால் நிறைந்திருக்கும் சாலைகள், தடம் புரண்டு விழும் ரயில்கள்,</strong></p> <p><strong>வரிப்பணம் எங்கே செல்கிறது, எல்லாம் தோல்வியா?</strong></p> <p>இதெல்லாம் வீண்தானா என்று நாங்கள் சொல்லும்போது?, நீங்கள் சிரித்துக்கொண்டே இது நாட்டின் லாபத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். நாங்கள் அதை சரிசெய்ய முயற்சி செய்யச் சொன்னால், உங்களை வளர்ச்சியடைந்தவர்களாக ஆக்குவோம் என்று சொல்கிறீர்கள்.</p> <p>இருப்பினும், நாங்கள் தேசபக்தியுள்ள பணம் செலுத்துகிறோம், ஒப்பிட முடியாத அளவுக்கு நாம் நேசிக்கும் தேசத்திற்கு பிரகாசமான மற்றும் நியாயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் எங்கள் பணம் ஒரு சிறிய பங்கை வகிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.</p> <p>அப்போது, மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியை எழுப்பினார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர், "இந்தியர்களில் 2% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதற்கு காரணம், &nbsp;வேலையின்மை, வருமான சமத்துவமின்மை, வறுமை, பணவீக்கம். நமது அரசாங்கம் மக்களில் 2% பேரை மட்டுமே தொடர்ந்து தாங்கி இயங்க முடியுமா.</p> <p>&nbsp;</p> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>"பொருளாதாரம் நத்தை வேகத்தில் முன்னேறிச் செல்லும் அதே வேளையில், வருமான பகிர்வானது, எப்போதும் போலவே சீரற்றதாக உள்ளது. - அவர்களின் பங்கு 1991 இல் டாப் &nbsp;1% பேர்களின் சொத்து மதிப்பானது 2023 &nbsp;10% ஆக அதிகரித்துள்ளது. &nbsp;</p> <p>நமது மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் இருக்கும் 50% பேர் - தேசிய வருமானத்தில் அவர்களின் பங்கு 20% இலிருந்து 13% ஆகக் குறைந்துள்ளது.&nbsp; வளர்ச்சியானது, அனைவருக்கும் ஒரேமாதிரியாக இல்லை எனவும் தெரிவித்தார்.</p>
Read Entire Article