Veera Serial Today June 14: அகோரியாக மாறிய மாறன்.. காலில் விழ சொன்ன வீரா.. வீரா சீரியல் அப்டேட்! 

1 year ago 6
ARTICLE AD
<p><strong>Veera Serial Today Written Update:</strong> தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமசந்திரன் மாறனை அடிக்கப் பாய, வீரா கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p> <p>அதாவது மாறன் சரக்கடித்துக் கொண்டு வீரா ராமச்சந்திரனை தடுத்து நிறுத்திய விஷயங்களை நினைத்துப்பார்த்து அவளுக்கு போன் செய்து &ldquo;முதல் முறையா என்னை அடிக்க ஓங்கின என் அப்பாவோட கை என் மேல படாமல் இருந்திருக்கு.. அதுக்கு காரணம் நீ தான்&rdquo; என்று நன்றி சொல்கிறான்.&nbsp;</p> <p>&ldquo;இதுக்கு முன்னாடி எல்லாம் ஒருத்தி இருந்தா, அவ இருக்க வரைக்கும் என் அப்பா என்னை அடிச்சது கிடையாது. நானும் இந்த மாதிரி மாறி இருக்க மாட்டேன்&rdquo; என்று தன்னுடைய அம்மா பற்றி பீல் செய்து பேசுகிறான். மறுநாள் காலையில் மாறன் கடையில் வேலை செய்து கொண்டிருக்க, அங்கு வந்த வீரா தனது காலைக்காட்டி &ldquo;என்னமோ என் கால்ல விழுந்து நன்றி சொல்லணும்னு சொன்னேயே?&rdquo; என்று கேட்க, மாறன் &ldquo;நீ சேர்த்துப் பேசுற, நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டேன்&rdquo; என்று சொல்கிறான்.&nbsp;</p> <p>இதையடுத்து ராகவன் டல்லாக உட்கார்ந்திருக்க, மாறன் &ldquo;என்னடா ஆச்சு?&rdquo; என்று கேட்க &ldquo;கல்யாணமாகி 10 நாளுக்கு மேல ஆக போகுது, ஆனால் கண்மணி என்னை கிட்ட கூட நெருங்க விட மாட்டுறா.. எல்லாத்துக்கும் நேரம் வரணும்னு சொல்றா&rdquo; என்று கவலைப்பட, மாறன் அதுக்கு ஒரு ஐடியா பண்ணுவோம் என்று சொல்கிறான்.&nbsp;</p> <p>பிறகு ராமசந்திரன் வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க, வீட்டுக்கு வந்த வீரா ராகவனிடம் ஒரு டாக்குமெண்டைக் கொடுத்து ராமசந்திரன் சார் கையெழுத்து வாங்கிட்டு வர சொன்னதாக சொல்கிறாள். பிறகு &ldquo;கடைக்கா போற?&rdquo; என்று ராகவன் கேட்க, வீரா ஆமாம் என்று சொல்ல, &ldquo;நானும் கடைக்கு தான் போறேன். சேர்ந்து போகலாம்&rdquo; என்று சொல்லி வெளியே வர அகோரி வேஷத்தில் தனது நண்பனுடன் வந்து நிற்கிறான் மாறன்.&nbsp;</p> <p>முதலில் அடையாளம் காணாத ராகவன் &ldquo;யார்ரா நீ வெளியே போ&rdquo; என்று சத்தம் போட, ராகவன் காதருகே சென்று &ldquo;டேய் நான் தான், உன்னையும் அண்ணியையும் சேர்த்து வைக்க தான் இப்படி வந்திருக்கேன்&rdquo; என்று சொல்ல, ராகவன் &ldquo;சாமி நீங்களா?&rdquo; என்று காலில் விழுந்து பெர்பாமென்ஸைத் தொடங்க, வீரா சந்தேகத்துடன் பார்க்க, மாறன் &ldquo;அந்தப் பொண்ணு ஏன் என் காலில் விழல?&rdquo; என்று கேட்கிறான்.&nbsp;</p> <p>ராகவன் காலில் விழ சொல்ல, வீரா &ldquo;மாமா அது மாறன் தானே?&rdquo; என்று கேட்க, ராகவன் &ldquo;ஆமாம் மா, என்னையும் உன் அக்காவையும் சேர்த்து வைக்க தான் வந்திருக்கான், காட்டிக் கொடுத்துடாதே.. காலில் விழு&rdquo; என்று சொல்ல, வீராவும் பெர்பாமன்ஸ் செய்கிறாள். பிறகு வாங்க சாமி என்று உள்ளே அழைத்துச் செல்ல, வள்ளி &ldquo;யார்ரா இது பிச்சைக்காரனை எல்லாம் உள்ள கூட்டிட்டு வந்திருக்கீங்க?&rdquo; என்று சத்தம் போடுகிறாள்.&nbsp;</p> <p>அகோரி வேடத்தில் இருக்கும் மாறனைப் பார்த்து &ldquo;இந்த மூஞ்ச எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே&rdquo; என்று சொல்ல, மாறன் &ldquo;இந்த வீட்டில் புதுசா கல்யாணமான ஜோடி இன்னும் சேராமல் இருக்கு.. அவங்க சீக்கிரமா சேரணும்&rdquo; என்று சொன்னதும் வள்ளிக்கு வந்திருப்பது மாறன் என்று தெரிந்து விட அவனை அடிக்கத் துரத்துகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article