<p><!--StartFragment --></p>
<p class="pf0"><span class="cf0">தமிழக</span> <span class="cf0">அரசு</span> <span class="cf0">மக்களுக்கான</span> <span class="cf0">பல்வேறு</span> <span class="cf0">திட்டங்களை</span> <span class="cf0">செயல்படுத்தி</span> <span class="cf0">வருகிறது</span><span class="cf1">. </span><span class="cf0">அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும். மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும். அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</span></p>
<p class="pf0"><span class="cf0">"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.</span> <span class="cf0">இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களாக இப்பணிகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொள்ள உரிய பயிற்சி</span> <span class="cf0">பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (</span><span class="cf2">TNeGA</span><span class="cf2">) </span><span class="cf0">மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.</span> <span class="cf0">இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.</span></p>
<p class="pf0"><span class="cf0">தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் </span><span class="cf0">தலைவர்</span><span class="cf0"> / உறுப்பினரிடம் வழங்குவர். திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து. படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு</span> <span class="cf0">தன்னார்வலர்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் </span><span class="cf2">www.uks.tn.gov.in </span><span class="cf0">என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.</span></p>
<p class="pf0"><span class="cf0">தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை நாளை (9.1.2026) திருவள்ளுர் மாவட்டம். பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.</span> <span class="cf0">அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் அன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்வர்</span> <span class="cf0">என</span> <span class="cf0">தெரிவிக்கப்பட்டுள்ளது</span><span class="cf1">.</span></p>
<p class="pf0"> </p>
<p class="pf0"><span class="cf1"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/world/crude-oil-price-is-lowest-in-which-country-246011" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
<p><!--EndFragment --></p>