UGC SOPs: க்யூட் தேர்வு இல்லாமலும் மாணவர் சேர்க்கை; மத்திய பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு- விவரம்!

1 year ago 8
ARTICLE AD
<p>மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு மாணவர் சேர்க்கைக்குப் பிறகும் இளநிலை, முதுநிலை இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் தாங்களாகவே நுழைவுத் தேர்வுகள் நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. &nbsp;</p> <p>இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறி இருப்பதாவது:</p> <p>&rsquo;&rsquo;மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3 அல்லது 4 கட்டங்கள் முடிந்த பிறகும் சில மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடங்கள் காலியாக இருப்பது யுஜிசியின் கவனத்துக்கு வந்துள்ளது.</p> <h2><strong>ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும்</strong></h2> <p>ஒட்டுமொத்த கல்வி ஆண்டுக்கும் இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது வளங்களை வீணடிப்பது மட்டுமல்ல, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர ஆசைப்படும் ஏராளமான மாணவர்களின் தரமான உயர் கல்வியை மறுப்பதாகும்.&nbsp;எனினும் மாணவர் சேர்க்கையில், க்யூட் எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள்தான் பிரதானமாக இருக்க வேண்டும். &nbsp;</p> <p>மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஏற்படும் காலி இடங்களை நிரப்பும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. க்யூட் தேர்வு எழுதிய மாணவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட படிப்புகள், பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">UGC releases SOPs to fill all seats in Central Universities, Here is what they entail. <a href="https://t.co/UtIAy0XaTU">https://t.co/UtIAy0XaTU</a></p> &mdash; Mamidala Jagadesh Kumar (@mamidala90) <a href="https://twitter.com/mamidala90/status/1818976646516392059?ref_src=twsrc%5Etfw">August 1, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <h2><strong> பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வு</strong></h2> <p>அதேபோல பல்கலைக்கழகங்கள் துறை வாரியாக குறிப்பிட்ட பாட சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் தளர்வை மேற்கொள்ளலாம். அதற்குப் பிறகும் சீட்டுகள் காலியாக இருந்தால், பல்கலைக்கழகங்கள் தானாகவே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறை ஸ்க்ரீனிங் தேர்வை நடத்தலாம். &nbsp;</p> <p>தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடைமுறையும் மெரிட் மற்றும் வெளிப்படைத் தன்மை அடிப்படையில் நடக்க வேண்டும்&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article