TTSE 2024: அக்.19 தமிழ் திறனறித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?

1 year ago 7
ARTICLE AD
<p>இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:</p> <p>19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும்&zwnj; தமிழ்மொழி இலக்கிய திறனறித்&zwnj; தேர்விற்கே வருகை புரியும்&zwnj; மாணவர்களின்&zwnj; பெயர்பட்டியலுடன்&zwnj; கூடிய வருகைத் தாள்&zwnj; தேர்வு மையம்&zwnj; வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ள ஏற்பாடுகள்&zwnj; செய்யப்பட்டுள்ளது.</p> <p>எனவே, ஒவ்வாரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்&zwnj; தவறாமல்&zwnj; பெயர்&zwnj; பட்டியலுடன்&zwnj; கூடிய வருகைதாள்&zwnj; பதிவிறக்கம்&zwnj; செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.</p> <p><strong>தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:</strong></p> <p>மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்&zwnj; சீட்டுக்களை பள்ளித்&zwnj; தலைமையாசிரியர்கள்&zwnj;/ முதல்வர்கள்&zwnj; <a href="http://www.dge.tn.gov.in">www.dge.tn.gov.in</a> என்ற இணையதளம்&zwnj; மூலம்&zwnj; தங்கள்&zwnj; பள்ளிக்கான User ID /Password கொண்டு பதிவிறக்கம்&zwnj; செய்துகொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்&zwnj; கொள்ளப்படுகிறது.</p> <p>மேலும்&zwnj;, தமிழ்மொழி இலக்கிய திறனறித்&zwnj; தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்&zwnj; சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்&zwnj;/ முதல்வர்கள்&zwnj; பதிவிறக்கம்&zwnj; செய்து வழங்கவும்&zwnj;, தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெரிவிக்கவும்&zwnj; அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><strong>அது என்ன தமிழ் திறனறிவுத் தேர்வு?</strong></p> <p>பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல்&zwnj;, கணிதம்&zwnj;, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்&zwnj; தயாராகி, பங்கு பெற்று வருகின்றனர். அதைப்&zwnj; போன்று தமிழ்&zwnj; மொழி இலக்கியத்&zwnj; திறனை மாணவர்கள்&zwnj; மேம்படுத்திக்&zwnj; கொள்ளும்&zwnj; வகையில்&zwnj; தமிழ்&zwnj; மொழி இலக்கியத்&zwnj; திறனறிவுத்&zwnj; தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.</p> <h2><strong>கடந்த ஆண்டு முதல் தேர்வு</strong></h2> <p>இதைத் தொடர்ந்து முதன்முதலாக&zwnj; 2022- 2023ஆம்&zwnj; கல்வியாண்டில் &nbsp;அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத்&zwnj; திறனறிவுத்&zwnj; தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், அதில் இருந்து &nbsp;1,500 மாணவர்கள்&zwnj; தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறை வழியாக மாதம்&zwnj; ரூ.1500/- வீதம்&zwnj; இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.</p>
Read Entire Article