<ul>
<li>தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் தவித்து வருகிறார். இதனிடையே பனையூர் அலுவலகத்துக்கு வருமாறு <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எம்எல்ஏக்களுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.</li>
<li>திராவிட கட்சிகள் திருமாவளவனை முதல்வராக முன்மொழிய வேண்டும். விஜய்யின் வெற்றி ரசிக மனோநிலை, பாசிசத்தின் சதியும் சேர்ந்து உருவாக்கியது. தமிழ்நாட்டை காப்பாற்ற திருமாவை முதல்வராக்குவது காலத்தின் கட்டாயம் என விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். </li>
<li>தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் தெரிவித்துள்ளார். </li>
<li>பெரும்பான்மை கிடைக்காததால் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சி.வி.சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். </li>
<li>சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </li>
<li>அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்களுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தான் எம்.எல்.ஏ.,க்கள் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </li>
</ul>
<p><iframe title="TR Balu Slams Congress | "துரோகம் எங்களுக்குப் புதிதல்ல பாஜக பாணியில் காங்கிரஸ்" டி.ஆர்.பாலு காட்டம்" src="https://www.youtube.com/embed/EQE23UtYF9U" width="805" height="453" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<ul>
<li>மேற்கு வங்கத்தின் மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. </li>
<li>ஹைதராபாத் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் சென்ற பெண் கமிஷனரிடம் அத்து மீறிய 40 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </li>
<li>பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு பாக்டீரியா தொற்று எதுவும் இல்லை என மும்பை மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </li>
<li>பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சார்பில் நிகழ்ந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தியா எதையும் மன்னிக்காது என இந்திய விமானப்படை வீடியோ வெளியிட்டுள்ளது. </li>
<li>மத்தியப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் 75 வயது வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.</li>
<li>ஒடிசா மாநிலத்தில் தேன் சேகரிக்க சென்ற சிறுவனின் தலை பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட நிலையில் உள்ளே பெரிய நாகம் இருந்தால் பெரும் அச்சம் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிறுவனை மீட்டனர். </li>
<li>எங்களை விட இன்ஸ்டாகிராம் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி வருத்தத்தை பதிவு செய்துள்ளார். </li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-should-mangoes-be-soaked-in-water-before-eating-259257" width="631" height="381" scrolling="no"></iframe></p>