<p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.</p>
<p><strong>வழங்கப்படும் பயிற்சிகள்</strong>: </p>
<p>1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses)</p>
<p> 2. துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல்* (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) தகுதி மற்றும் நிபந்தனைகள்: வகுப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC / ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். </p>
<p><strong>கல்வித் தகுதி</strong>: 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். </p>
<p><strong>வயது வரம்பு</strong>: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். </p>
<p><strong>ஆண்டு வருமானம்</strong>: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள்இருக்க வேண்டும்.</p>
<p> <strong>பயிற்சியின் சிறப்பம்சங்கள்:</strong> கால அளவு: 4 மாதங்கள் இடம் மற்றும் தங்குமிடம்: இப்பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி மற்றும் உணவுச் செலவினங்கள் முழுவதையும் தாட்கோ (TAHDCO) ஏற்கும்.</p>
<p><strong>சான்றிதழ் & வேலைவாய்ப்பு</strong>: பயிற்சி நிறைவுற்றதும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தகுதியான நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் ரூ.25,000- முதல் ரூ.50,000- வரை ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.</p>
<p> <strong>விண்ணப்பிக்கும் முறை:</strong> தகுதியும் விருப்பமும் உள்ள விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான <a href="http://www.tahdco.com">www.tahdco.com</a> - என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.</p>