Top 10 News Headlines: மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவர், காஸாவில் உணவுக்கு பஞ்சம் - 11 மணி செய்திகள்

5 months ago 4
ARTICLE AD
<p><strong>நாங்கள் ஏமாளிகள் அல்ல - எடப்பாடி</strong></p> <p>&ldquo;ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்&rdquo; -திருவாரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு</p> <p><strong>கனமழை - ஆரஞ்சு எச்சரிக்கை</strong></p> <p>தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு. இன்று முதல் ஜூலை 22ம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.</p> <p><strong>மருத்துவமனை புகுந்து மனைவியை கொன்ற கணவர்</strong></p> <p>கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவர் விஷ்ருத் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு.<br />நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி ஷ்ருதியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஷ்ருதியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.</p> <p><strong>ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம் போன மீன்</strong></p> <p>புதுச்சேரி: ஏனாமில் மீனவர் வலையில் சிக்கிய 1.8 கிலோ எடையுள்ள அரிய வகை புலாசா மீனை ரத்தினம் என்ற மீன் வியாபாரி ரூ. 22,000-க்கு ஏலம் எடுத்தார். புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி கோதாவரி நதி நீரில் தற்போது இந்த பிரபலமான புலாசா மீன் பருவம் அதிகமாக உள்ளது.</p> <p><strong>நாளை நாடாளுமன்றம் தொடர்</strong></p> <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. அடுத்த ஒரு மாத காலம் நடைபெற உள்ள தொடரில், பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆயத்தம்.</p> <p><strong>15 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள்</strong></p> <p>ஒடிசா: பூரி மாவட்டத்தில் மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட 15 வயது சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் 70% தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூர செயலை செய்த நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. சுயநினைவோடு உள்ள அச்சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <p><strong>வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்</strong></p> <p>திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு SC/ST பிரிவினர் என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.</p> <p><strong>காஸாவில் உணவுக்கு பஞ்சம்</strong></p> <p>காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு. உணவு விநியோக மையம் மீது நடத்திய தாக்குதலில் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!<br />மணலில் சிதறிய கோதுமை மாவை போட்டிப்போட்டுக்கொண்டு மக்கள் சேகரிக்கும் பரிதாப காட்சி வெளியாகி மனதை உலுக்கியுள்ளது.</p> <p><strong>சவுதி இளவரசர் காலமானார்</strong></p> <p>சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வலீத் பின் காலெத் (35) காலமானார். 15 வயது சிறுவனாக இருந்தபோது விபத்தில் சிக்கி 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரின் உயிர் பிரிந்தது.</p> <p><strong>இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து</strong></p> <p>முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் வெளியேறியதை அடுத்து நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p>
Read Entire Article