<p><strong>“பாஜக அரசின் சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்"</strong></p>
<p>“கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழகத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்”<br />-திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்</p>
<p><strong>ஓபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி</strong></p>
<p>"6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை" என்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு. அவரை பற்றி தான் குறைசொல்ல விரும்பவில்லை என்றும் விளக்கம்.</p>
<p><strong>பருவமழை ஏற்பாடுகள் தீவிரம்</strong></p>
<p>சென்னையில் மெட்ரோ, மேம்பால கட்டுமானம், குடிநீர் வாரியப் பணிகள் ஆகியவை நடக்கும் இடங்களில் பருவ மழைக்காக 477 நீர் இறைக்கும் ட்ராக்டர்களை நிறுத்த மாநகராட்சி ஏற்பாடு.<br />செப். 15 முதல் ஜனவரி 14ம் தேதி வரை வாடகைக்கு எடுக்கப்படும் இந்த ட்ராக்டர்களுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p>
<p><strong>சிலைகள் பறிமுதல்</strong></p>
<p>தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல்.<br />கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகியோர் கைது.</p>
<p><strong>கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிப்பு</strong></p>
<p>சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் புகாரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகள் இருவருக்கு NIA நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் சிறையில் இருந்து விடுவிப்பு. கேரள பாஜக தலைவர் நேரில் சென்று வரவேற்பு.பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.</p>
<p><strong>வாழ்நாள் பயணத்தடை</strong></p>
<p>மும்பையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவிப்பு. இதற்கிடையே பாதிக்கப்பட்ட அசாமைச் சேர்ந்த நபர் இன்னும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்</p>
<p><strong>தீவிரமடையும் கட்டுப்பாடுகள்</strong></p>
<p>அமெரிக்காவில் திருமண அடிப்படையில் குடியுரிமைக்கான க்ரீன் கார்ட் வழங்குவதற்கான விதிகளை தீவிரமாக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இருவருக்கும் நேர்காணல் மற்றும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p><strong>ஆசிய கோப்பை டி20 - அட்டவணை வெளியீடு</strong></p>
<p>ஆசிய கோப்பை டி20 தொடர் ஐக்கிய அமீரகத்தில் வரும் செப். 09 தொடங்கி செப். 19 வரை நடக்கிறது செப். 14ம் தேதி துபாய் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதல். லீக் சுற்று மட்டுமின்றி மேலும் இரண்டு முறை இந்தியா - பாகிஸ்தான் இந்த போட்டியில் மோதவும் வாய்ப்புள்ளது.</p>
<p><strong>தென்னாப்ரிக்கா சாம்பியன்</strong></p>
<p>உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் உடனான அரையிறுதியை இந்தியா புறக்கணித்ததால் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது<br />பாக்., - 195/5 (20), தென்னாப்ரிக்க - 197/1 (16.5)</p>
<p><strong>கடைசி டெஸ்டில் வெற்றி யாருக்கு?</strong></p>
<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவைப்படுகிறது. மூன்றாவது நாள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை சேர்த்துள்ளது.</p>