<ul>
<li>சென்னையிலிருந்து 400 கி.மீ., தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </li>
<li>டிட்வா புயல் காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </li>
<li>டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. </li>
<li>டிட்வா புயல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இலங்கையில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பொதுத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.</li>
<li><a title="சபரிமலை" href="https://tamil.abplive.com/topic/sabarimala" data-type="interlinkingkeywords">சபரிமலை</a> செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்காசி, கோவை,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. </li>
</ul>