<ul>
<li>பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். </li>
<li>100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.</li>
<li>சென்னை விமான நிலையத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் உடமைகள் சோதனை செய்ய வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.</li>
<li>ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது மத்திய அரசு - அப்பகுதியில் உள்ள வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடம் தேவைப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</li>
<li>தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். இதன்பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படவுள்ளது. </li>
<li>தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - திமுக அமைச்சர்கள் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளனர். </li>
<li>இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.2 கோடி அபராதம் விதித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 2025 டிசம்பரில் ஏற்பட்ட செயல்பாடு குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</li>
<li>வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்களுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு - அனைத்து மண்டலங்களிலும் ரயில்களை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. </li>
<li>குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகைகு ஜனவரி 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </li>
<li>அருணாச்சலப் பிரதேசத்தில் பனியால் உறைந்த ஏரியில் மூழ்கி கேரளாவைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</li>
<li>இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. </li>
</ul>