<p>அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைத் திருத்த, டிஎன்பிஎஸ்சி மிகக் குறைவான நாட்களே எடுத்துக்கொண்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.</p>
<h2><strong>விரைவாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி</strong></h2>
<p>இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ குடிமைப் பணிகளில்‌ உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும்‌ பொருட்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வுகளை நடத்தி வருகிறது.</p>
<p>விரைவாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் தேர்வர்களின்‌ நலன்‌ கருதியும்‌, தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும்‌, 2024-ம்‌ ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வுகளின் முடிவுகள்‌ 2022-ம்‌ ஆண்டை ஒப்பிடுகையில்‌ விரைவாக வெளியிடப்‌பட்டுள்ளன.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="zxx"><a href="https://t.co/8Irg5xcBab">pic.twitter.com/8Irg5xcBab</a></p>
— TNPSC (@TNPSC_Office) <a href="https://twitter.com/TNPSC_Office/status/1867186691339067751?ref_src=twsrc%5Etfw">December 12, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு- (குரூப் 1 பணிகள்‌)-க்கான முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ 33 வேலை நாட்களுக்கு உள்ளும்‌, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு (குரூப் 2 மற்றும்‌ 2 ஏ பணிகள்‌)-க்கான முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ 57 வேலை நாட்களுக்குள்ளும்‌, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு- (குரூப் 4 பணிகள்‌)-க்கான தேர்வு முடிவுகள்‌ 92 வேலை நாட்களுக்கு உள்ளும்‌ வெளியிடப்‌பட்டுள்ளன'' என்று <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> செயலாளர்‌ கோபால சுந்தர ராஜ் ‌தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னதாக நேற்று மாலை குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஏற்கெனவே டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாதத்தின் முதல் பாதியிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. </p>
<h2><strong>33 நாட்களிலேயே தேர்வு முடிவுகள்</strong></h2>
<p>அதேபோல குரூப் 4 தேர்வு முடிவுகளும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விரைவாக வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக குரூப் 1 தேர்வு முடிவுகள் வெறும் 33 நாட்களிலேயே வெளியிடப்பட்டன. </p>
<h2><strong>முழு வீச்சில் பணி</strong></h2>
<p>டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்ட பிறகு, தேர்வு பணிகள் முழு வீச்சில் வேகமெடுத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. </p>