<p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. </p>
<p><a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.</p>
<h2><strong>ஊதியம்</strong></h2>
<p>பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி, நிலை 16-ன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். </p>
<h2><strong>தேர்வு எப்போது?</strong></h2>
<p>பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை முறையே தாள் 1 மற்றும் தாள் 2 ஆக நடக்கிறது. எழுத்துத் தேர்வு முறையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அன்று காலை முதல் தாளும் மதியம் இரண்டாவது தாளும் நடைபெற உள்ளது. மொத்தம் 35 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடக்க உள்ளது.</p>
<h2><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2>
<p>தேர்வர்கள் <a href="https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ">https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ</a>== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.</p>
<p>குரூப் 5 ஏ தேர்வு குறித்த முழுமையான தகவல்களுக்கு <a href="https://www.tnpsc.gov.in/Document/tamil/Group%20V%20A%20TAMIL_.pdf">https://www.tnpsc.gov.in/Document/tamil/Group%20V%20A%20TAMIL_.pdf</a> என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.</p>
<p><strong>கூடுதல் தகவல்களுக்கு: <a href="https://www.tnpsc.gov.in/">https://www.tnpsc.gov.in/</a></strong></p>