<p class="abp-article-slug">2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை, அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். இதில் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்ற 145 பேரில் 140 பேர், தமிழ்நாடு தேர்வு வாரியத்தின்கீழ் படித்தவர்கள் ஆவர்.</p>
<h2 class="abp-article-slug"><strong>முதலிடம் பிடித்த மாணவர்கள் யார் யார்?</strong></h2>
<p>காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சஹஸ்ரா மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா 2ஆம் இடம் பெற்றுள்ளார். அதேபோல, அமலன் ஆண்டோ என்னும் அரியலூர் மாணவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் அனைவரும் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில், 7 இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர். 3 பேர் மாணவர்கள் ஆவர்.</p>
<p>அதேபோல, அரசுப் பள்ளி 7.5 இட ஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்னும் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவரும் 200-க்கு 200 மதிப்பெண்களையே பெற்றுள்ளார். </p>
<p>மாணவர்கள் <a href="https://static.tneaonline.org/docs/ACADEMIC_GENERAL_RANK_LIST_2025.pdf?t=1750999997778" rel="nofollow">https://static.tneaonline.org/docs/ACADEMIC_GENERAL_RANK_LIST_2025.pdf?t=1750999997778 </a>என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>