Tn Scholarship: தொழில் கல்வி மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

1 week ago 2
ARTICLE AD
<p style="text-align: justify;">"தொழில் கல்வி பயலும் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் உதவி தொகை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்"</p> <h3 style="text-align: justify;">ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை</h3> <p style="text-align: justify;">தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியானது, ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் ?</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒற்றை சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்றதற்கான சான்று, போஸ்ட் மெட்ரிக் (Post Matric Scholarship) கல்வி உதவித்தொகை மற்றும் 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்க்கை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவை வழங்க வேண்டும்.&nbsp;</p> <p style="text-align: justify;">மேலும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கை பெற்று பயிலும் ஏழை மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். எனவே அதற்கான வருமான சான்று, மதிப்பெண் சான்று (+2)&nbsp; தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிட சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்படி தகுதியுள்ள மாணவர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.</p>
Read Entire Article