<p><strong>TN Govt DMK ADMK:</strong> திமுக - அதிமுக நேரடியாக கைகோர்த்து ஆட்சி அமைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் புது திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.</p>
<h2><strong>தவிப்பில் விஜய்..!</strong></h2>
<p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தும், இதுநாள் வரை ஆட்சி அமைக்க முடியாம்ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தள்ளாடி வருகிறார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலமாக 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார். இன்னும் வெறும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றாலே விஜய் முதலமைச்சராக பதவியேற்கலாம். இதுதொடர்பான தங்களது நிலைப்பாட்டை விசிக தலைவர் திருமாவளவன் இன்று அறிவிக்க உள்ளார். அவரது முடிவில் தான் விஜயின் ஆட்சி அதிகார கனவு பலிக்குமா? இல்லையா? என்பது முடிவாக உள்ளது. இதனிடையே, தவெக தரப்பு குதிரை பேரம் நடத்துவதாக, டிடிவி தினகரன் வைத்துள்ள குற்றச்சாட்டும் தமிழ்நாடு அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/why-you-should-eat-bottle-gourd-seeds-amazing-health-benefits-know-details-in-pics-259498" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>கைகோர்க்கும் திமுக - அதிமுக?</strong></h2>
<p>இதனிடையே, கடந்த சில நாட்களாகவே <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க, திமுக மற்றும் அதிமுக சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக பல தகவல்கள் கசிந்த்தன. இவை சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தையும், கடுமையான எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. இத்தகைய முடிவு என்பது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அரசியல் எதிர்காலமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடும் என பல மூத்த பத்திரிகையாளர்களும் எச்சரித்தன. அதைதொடர்ந்துதான், பரம எதிரியான அதிமுக உடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக மற்றும் திமுக நேரடியாக கூட்டணி சேராமல், புதியதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தவும் பரிசீலிக்கப்படுகிறதாம்.</p>
<h2><strong>முதலமைச்சராகும் திருமா...?</strong></h2>
<p>வெளியாகியுள்ள தகவல்களின்படி, திமுக மற்றும் அதிமுக நேரடியாக கூட்டணி அமைக்காமல், ஏதேனும் ஒரு கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க பரிசீலிக்கப்படுகிறதாம். மாநிலத்தில் குடியரசு தலைவர்/ஆளுநர் ஆட்சி மூலம் பாஜகவின் நிர்வாகத்தை தடுக்கவும், நிலையான ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். திமுக மற்றும் அதிமுக போன்ற எந்த கட்சியில் இருந்து கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முன்னிலைபடுத்தப்பட்டாலும் மக்களிடையே அதிருப்தி ஏற்படும் என்பதால், பட்டியலின மக்களின் குரலாக ஒலிக்கும் திருமாவை முன்னிறுத்த ஆலோசிக்கப்படுகிறதாம்.</p>
<h2><strong>பெரும்பான்மை இருக்கா?</strong></h2>
<p>தேர்தல் முடிவுகளின்படி திமுக வசம் 59 உறுப்பினர்களும், அதிமுக வசம் 47 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த கூட்டு எண்ணிக்கையானது 106 ஆக உள்ளது. இதுபோக இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியில் (<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>க்கு ஆதரவளித்தவர்கள் போக)பாட்டாளி மக்கள் கட்சி, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் , பாஜக, தேமுதிக மற்றும் அமமுக என மேலும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 117 உறுப்பினர்களை திருமாவளவன் பெற முடியும். இதுவும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பாஜக ஆதரவை திருமா ஏற்பாரா? அதிமுக மற்றும் பாஜக உள்ள கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறுமா? என்பது போன்ற பல விடையில்லா கேள்விகளும் உள்ளன.</p>