<p><a title="தமிழ்நாடு அரசின் பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/tn-budget-2025" data-type="interlinkingkeywords">தமிழ்நாடு அரசின் பட்ஜெட்</a> கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.</p>
<ul style="list-style-type: square;">
<li>ரூ.1,168 கோடியில், 3 லட்சம் ஏக்கரில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்த நுண்ணீர்ப் பாசன திட்டம்.</li>
<li>ரூ.269 கோடியில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், 2,335 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.</li>
<li>ரூ.160 கோடியில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்.</li>
<li>ரூ.108 கோடியில் எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்க 7.14 ஏக்கரில் 90,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம்.</li>
<li>ரூ.102 கோடியில், டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்.</li>
<li>சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.</li>
<li>விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி ஒதுக்கீடு.</li>
<li>விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ஹேக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.</li>
<li>63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.</li>
<li>நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு, 1-லிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்வு.</li>
<li>மக்காச்சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் ரூ.40 கோடியில் செயல்படுத்தப்படும்.</li>
<li>37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு.</li>
<li>அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.</li>
<li>ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத் தொகை 40%-த்திலிருந்து 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</li>
<li>தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு.</li>
</ul>
<p> </p>