<p>2025ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, விடைத் தாள் நகல் இன்று (ஜூன் 4) பிற்பகல் முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை முதல் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.</p>
<p><strong>இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:</strong></p>
<p>மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்‌ தேர்வு மார்ச்‌ 2025 விடைத்தாட்களின்‌ நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளல்‌, மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்‌:</p>
<p>மார்ச்‌ 2025, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை 04.06.2025 (புதன்கிழமை) பிற்பகல்‌ முதல் பெறலாம்.</p>
<h2><strong>எப்படி?</strong></h2>
<p>மாணவர்கள், ‌ <a href="http://www.dge.tn.gov.in">www.dge.tn.gov.in</a> என்ற இணையதளத்திற்குச் சென்று Notification-ஐ Click செய்தவுடன்‌ HSE Second Year Exam, March 2025 - Scripts Download என்ற வாசகத்தினை “Click” செய்ய வேண்டும். அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது பதிவெண் மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.</p>
<p><strong>மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?</strong></p>
<p>விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ ‘Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பை க்ளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்.</p>
<p>தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 05.06.2025 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல்‌ 07.06.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.</p>
<p>மறுகூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.</p>
<p>தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையை பணமாக செலுத்த வேண்டும்‌.</p>
<p><strong>மறுமதிப்பீடு</strong></p>
<p>பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505.</p>
<p><strong>மறுகூட்டல்‌</strong></p>
<p>உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-</p>
<p>ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/- என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. </p>