<p><strong>டெலிகிராம் ஐடி - யில் இணைப்பு ; </strong></p>
<p>சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுதா கார்த்திக் ( வயது 44 ) என்பவர் சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் , வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அவர்கள் கூறிய Telegram ID களில் இணைந்து அதில் அனுப்பிய விளம்பரங்களுக்கு Subscribe செய்து சிறிது லாபம் பெற்றதாகவும் பின்னர் அதனை நம்பி மேலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பல்வேறு Task களை முடிக்க வேண்டி மேற்படி நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு புகார் தாரர் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய்.24,89,665/- அனுப்பியதாகவும் , பின்னர் புகார் தாரருக்கு எவ்வித பணமும் திரும்ப கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதா கார்த்திக் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகாரின் மீது கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.</p>
<p><strong>கர்நாடகாவில் பதுங்கியிருந்த குற்றவாளி</strong></p>
<p>கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகார்தாரர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் விவரங்கள் போன்றவற்றை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளி பயன்படுத்திய Mail ID, Phone Number ஆகியவற்றின் IP விவரங்கள் மற்றும் அதன் Network User ID முகவரி ஆகியவற்றை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் பகுப்பாய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. </p>
<p><strong>குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கு கொடுத்து பணம் </strong></p>
<p>அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த தீபா ( வயது 26 ) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து, அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
<p>விசாரணையில் தீபா திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருவதும், இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கை கொடுத்து பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட தீபா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.</p>