Tamilnadu Roundup: ரூ.10 லட்சம் நிதியுதவி, 870 ஏக்கரில் திட்டம், மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - 10 மணி செய்தி

6 months ago 7
ARTICLE AD
<ul> <li>சாலைவிபத்தில் உயிரிழக்கும் தி.மு.க உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600க்கு விற்பனை</li> <li>பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை</li> <li>தனது 82வது பிறந்தநாளை ஒட்டி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த இசைஞானி இளையராஜா மகிழ்ச்சி</li> <li>தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருள் விற்பனை செய்த 18,000 கடைகளுக்கு சீல்</li> <li>திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அமைய உள்ள அறிவுசார் நகருக்கான பணிகளை தொடங்கியது டிட்கோ</li> <li>கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என பல உணர்வுகளுடன் மாணவர்கள் சங்கமம்</li> <li>கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடக்கம்</li> <li>தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்</li> <li>திருச்சி: மணப்பாறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பெருமாள் என்பவர் கைது</li> <li>அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது</li> <li>ராமேஸ்வரம் கோயிலில் ராமநிலிங்க பிரதிஷ்டையை ஒட்டிஜூன் 4இல் நடை அடைப்பு</li> <li>திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய&nbsp; பால் வழங்கும் திட்டம் தொடங்கிவைப்பு</li> </ul>
Read Entire Article