Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!

7 months ago 5
ARTICLE AD
<p>மாணவர்களின்&zwnj; தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள்&zwnj; மலை சுற்றுலாத்&zwnj; தளங்களில்&zwnj; நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.</p> <p>இதுகுறித்து பள்ளிக் கல்வித்துற இயக்குநர் கூறி உள்ளதாவது:</p> <p>&rsquo;&rsquo;மாணவர்களின்&zwnj; தனித்திறன்களை மெருகேற்றும்&zwnj; வகையிலும்&zwnj; கோடை விடுமுறையைப்&zwnj; பயனுள்ள வகையில்&zwnj; செலவழித்திடவும்&zwnj;. கோடைக் கொண்டாட்ட சிறப்புப்&zwnj; பயிற்சி முகாம்கள்&zwnj; மலை சுற்றுலாத்&zwnj; தலங்களில்&zwnj; நடத்தப்படும்&zwnj; எனத்&zwnj; தெரிவிக்கப்பட்டது.</p> <p>அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம்&zwnj;, சேலம்&zwnj; (ஏற்காடு) ஆகிய இரு மாவட்டங்களில்&zwnj; இரண்டு பிரிவுகளாக 5 நாட்கள்&zwnj; சுற்றுலா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில்&zwnj; 11&zwnj;ஆம்&zwnj; வகுப்பு முடித்துள்ள மாணவர்களில்&zwnj; கல்வி இலக்கியம்&zwnj;, அறிவியல்&zwnj;, வினாடி வினாப்&zwnj; போட்டிகளில்&zwnj; சிறந்து விளங்கும்&zwnj; மாணவர்களை தெரிவு செய்திடவும்&zwnj; அரசுப் பள்ளிகளில்&zwnj; 11ஆம்&zwnj; வகுப்பு முடித்துள்ள மாணவர்களில்&zwnj; ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு மற்றும்&zwnj; வினாடி வினா போட்டியில்&zwnj; சிறந்து விளங்கிய 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p> <p>இவற்றில்&zwnj; நீலகிரி மாவட்ட முகாமிற்கு 625 மாணவிகளும்&zwnj;, 429 மாணவிகள்&zwnj; காத்திருப்போர்&zwnj; பட்டியலுடனும்&zwnj;, சேலம்&zwnj; மாவட்டம்&zwnj;&nbsp;ஏற்காடு முகாமிற்கு 275 மாணவர்களும்&zwnj; காத்திருப்போர்&zwnj; 171 மாணவர்கள்&zwnj; காத்திருப்போர்&zwnj; பட்டியலுடன்&zwnj; சேர்த்து 1500 மாணவ, மாணவியர்களின்&zwnj; பட்டியல்&zwnj; அனுப்பப்பட்டுள்ளது.</p> <p>தெரிவுப்&zwnj; பட்டியலில்&zwnj; உள்ள மாணவ / மாணவிகள்&zwnj; பங்கேற்காத நிலையில்&zwnj; காத்திருப்போர்&zwnj; பட்டியலில்&zwnj; உள்ள மாணவ, மாணவியர்களை அந்தந்த மாவட்ட பட்டியலில்&zwnj; உள்ள மதிப்பெண்&zwnj; அடிப்படையில்&zwnj; மாவட்ட முதன்மைக்&zwnj; கல்வி அலுவலரால்&zwnj;, நீலகிரி, சேலம்&zwnj; மாவட்ட முதன்மைக்&zwnj; கல்வி அலுவலரால்&zwnj; பரிந்துரைக்கப்பட வேண்டும்&zwnj;.</p> <h2><strong>பெற்றோர் ஒப்புதல்</strong></h2> <p>நடைபெற உள்ள&zwnj; கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில்&zwnj; இணைப்பில்&zwnj; உள்ள அரசு பள்ளிகளில்&zwnj; 11ஆம்&zwnj; வகுப்பு பயிலும்&zwnj; மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்&zwnj; சென்று பயிற்சி முகாமில்&zwnj; கலந்து கொள்வதற்கு ஏதுவாக சார்ந்த மாணவ / மாணவியர்களின்&zwnj; பெற்றோர்&zwnj; , பாதுகாவலர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல்&zwnj; கடிதம் பெறப்பட வேண்டும்.</p> <p>கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில்&zwnj; கலந்துகொள்ளும்&zwnj; மாணவ, மாணவியர்கள்&zwnj; மற்றும்&zwnj; பாதுகாப்பிற்காக உடன்&zwnj; செல்லும்&zwnj; ஆசிரியர்கள்&zwnj; எவ்வித புகாருக்கும்&zwnj; இடமின்றி கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில்&zwnj; கலந்துகொள்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.</p> <p>மாணவிகளை அழைத்துச்&zwnj; செல்லும்பொழுது கட்டாயம்&zwnj; 20 மாணவிகளுக்கு 1 பெண்&zwnj; ஆசிரியரும்&zwnj; மாணவிகளின்&zwnj; எண்ணிக்கை அதிகம்&zwnj; இருப்பின்&zwnj; ஒரு மாணவியின் தாயாரினையும்&zwnj; விருப்பத்தின்&zwnj; பேரில்&zwnj; அனுமதிக்கலாம்&zwnj;. மாணவியருக்கான முகாம்&zwnj; நீலகிரி மாவட்டத்திலும்&zwnj;, மாணவர்களுக்கான முகாம்&zwnj; சேலம்&zwnj; மாவட்டத்திலும் நடைபெறும்&zwnj; என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article