Students Admission: கடந்த ஆண்டைவிட கூடுதல் மாணவர் சேர்க்கை எனில்.. அரசுப் பள்ளிகளுக்கு ஆஃபரை அறிவித்த அரசு

6 months ago 5
ARTICLE AD
<p>பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.</p> <p>அதேபோல மார்ச் 1ஆம் தேதியே மாணவர் சேர்க்கைக்கான பணிகளும் தொடங்கி, சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.</p> <h2><strong>இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:</strong></h2> <p>அரசாணை (நிலை) எண்&zwnj;.81, பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj;துறை, நாள்&zwnj;.15.03.2024, இன்படியும்&zwnj; மாணவர்&zwnj; சேர்க்கை மார்ச்&zwnj; 1 ஆம்&zwnj; தேதி முதல்&zwnj; நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள்&zwnj; வழங்கப்பட்டுள்ளன.&nbsp;இந்த வழிகாட்டுதல்களைத்&zwnj; தவறாமல்&zwnj; பின்பற்றவும்&zwnj;, தேவையான நடவடிக்கையை பள்ளித்&zwnj; தலைமையாசிரியர்&zwnj; மேற்கொள்ள வேண்டும்&zwnj;.</p> <p>மாணவர்&zwnj; சேர்க்கைக்&zwnj; கொண்டாட்டம்&zwnj; அனைத்துப்&zwnj; பள்ளிகளிலும்&zwnj; பள்ளி திறந்த முதல்&zwnj; நாள்&zwnj; அன்றே நடத்தப்படவேண்டும்&zwnj;.</p> <h2><strong>தொடக்கப்&zwnj; பள்ளிகளில்&zwnj; முதல்&zwnj; வகுப்பில் முழு சேர்க்கை</strong></h2> <p>குறிப்பாக தொடக்கப்&zwnj; பள்ளிகளில்&zwnj; முதல்&zwnj; வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்திட ஆசிரியர்கள்&zwnj; முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்&zwnj;.&nbsp;பள்ளி அமைந்துள்ள பகுதிகளில்&zwnj; பள்ளி செல்லும்&zwnj; வயதுடைய அனைத்துக்&zwnj; குழந்தைகளையும்&zwnj; பள்ளியில்&zwnj; சேர்ப்பதை உறுதி செய்திடல்&zwnj; அவசியம்&zwnj;.</p> <p>8 ஆம்&zwnj; வகுப்புத்&zwnj; தேர்ச்சி பெற்ற மாணவர்கள்&zwnj; அனைவரும்&zwnj; 9ஆம்&zwnj; வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும்&zwnj;.</p> <h2><strong>அரசுப்&zwnj; பள்ளிகளுக்குப்&zwnj; பாராட்டுச் சான்றிதழ்&zwnj;</strong></h2> <p>பள்ளியின்&zwnj; சிறந்த செயல்பாடுகளைப்&zwnj; பள்ளிக்கு அருகில்&zwnj; உள்ள குடியிருப்புகளில்&zwnj; வசிக்கும்&zwnj; பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும்&zwnj; விளம்பரங்கள்&zwnj; மற்றும்&zwnj; கலை நிகழ்ச்சிகளின்&zwnj; மூலம்&zwnj; அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; செயல்படுத்தப்பட்டு வரும்&zwnj; அரசின்&zwnj; பல்வேறு நலத்திட்டங்களைப்&zwnj; பற்றி விளக்கி, கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம்&zwnj; 50 மாணவர்களைக்&zwnj; கூடுதலாகச்&zwnj; சேர்க்கும்&zwnj; அரசுப்&zwnj; பள்ளிகளுக்குப்&zwnj; பாராட்டுச் சான்றிதழ்&zwnj; வழங்கப்படும்&zwnj; என பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj;துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>உரிய நடைமுறைகளைப்&zwnj; பின்பற்றி இம்மாணவர்&zwnj; சேர்க்கையில்&zwnj; சிறப்பு கவனம் செலுத்தி அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; தரமான இலவசக்&zwnj; கல்வி வழங்கப்படுவதைப்&zwnj; பொது மக்கள்&zwnj; அனைவரும்&zwnj; அறியும்&zwnj; வண்ணம்&zwnj; பேனர்கள்&zwnj; மற்றும்&zwnj; துண்டு பிரசுரங்கள்&zwnj; மூலம்&zwnj; மாணவர்களின்&zwnj; பெற்றோர்களுக்குத்&zwnj; தெரியப்படுத்தி மாணவர்கள்&zwnj; சேர்க்கையை அதிகரிக்கச்&zwnj; செய்ய வேண்டும்&zwnj;.&nbsp;மாணவர்&zwnj; சேர்க்கைக்கான சிறப்பு முகாம்களையும்&zwnj; பள்ளி வாரியாக நடத்த வேண்டும்.</p> <p>மாவட்ட மக்கள்&zwnj; தொடர்பு அலுவலர்களை அணுகி அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; மாணவர்&zwnj; சேர்க்கை குறித்துச்&zwnj; செய்தித் தாள்களில்&zwnj; செய்திகள்&zwnj; வெளியிட நடவடிக்கைகள்&zwnj; மேற்கொள்ள வேண்டும்&zwnj; என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article