SRH vs MI: காஷ்மீர் கொடூர தாக்குதல் துக்கம்; ஐபிஎல் போட்டியில் இன்று கொண்டாட்டம் ரத்து

7 months ago 5
ARTICLE AD
<p><strong>Pahalgam Terror Attack:</strong> காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நேற்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக இந்திய மக்கள் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் நடத்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார்.&nbsp;</p> <p>இந்தியா முழுவதும் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 26 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த விவகாரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p> <h2><strong>கொண்டாட்டங்கள் ரத்து:</strong></h2> <p>இதன்படி, இரு அணிகளின் சார்பிலும் நடத்தப்படும் சியர்கேர்ள்ஸ் நடனங்கள், போட்டி முடிந்த பிறகு நடத்தப்படும் வாண வேடிக்கை, டிஜே நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீரர்கள் மெளன அஞ்சலி செலுத்துவதுடன் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article