Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
<p><strong>Schools Colleges Holiday ( 02-12-2024):</strong> ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2><strong>10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:</strong></h2> <p>கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>மேலும், ராணிப்பேட்டை, சேலம், வேலூர், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள&nbsp;<strong>பள்ளிகளுக்கு மட்டும்</strong> இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடயே, புதுச்சேரியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2><strong>மீட்பு பணிகள் தீவிரம்:</strong></h2> <p>ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ந்து சென்றது. இதனால் விழுப்புரத்தில்&nbsp; அதிகனமழையானது கொட்டித் தீர்த்தது. மேலும் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து , திருவண்ணாமலை நோக்கி சென்று விட்டது.</p> <p>இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத வேக காற்று மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.இதனால் சில சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் , வெள்ளநீரால் விழுப்புரம் -செஞ்சி இடையிலான சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p> <p>இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.&nbsp;</p>
Read Entire Article