Roshni Nadar: இந்தியாவின் பணக்கார பெண்மணி! யார் இந்த ரோஷ்னி நாடார்?

2 months ago 5
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>Roshni Nadar: இந்தியாவின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள&nbsp; ரோஷ்னி நாடார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.</strong></p> <p>&nbsp;</p> <h2><strong>யார் இந்த ரோஷ்னி நாடார்:</strong></h2> <p style="text-align: justify;">HCL நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தான் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா. HCL &nbsp;நிறுவனத் தலைவரான ஷிவ் நாடார் மற்றும் கிரண் தம்பதிக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் ரோஷ்னி நாடார். புது டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.</p> <p style="text-align: justify;">பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் ஊடக துறையில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றிய ரோஷ்னி நாடார் பின்னர் HCL குழுமத்தில் இணைந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு HCL நிறுவனத்தின் தலைவரானார்.</p> <p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து இவரது தலைமையின் கீழ் பல்வேறு வெளிநாடுகளிலும் HCL&nbsp; நிறுவனம் கால்பதித்தது. இவர் ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நல சேவைகளையும் செய்து வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஷிகர் மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் இருக்கின்றனர். போர்ப்ஸ் இதழ் 2023-ல் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ரோஷ்னி 60-ம் இடம் பெற்றிருந்தார்.</p> <h2 style="text-align: justify;"><strong>முதல் பெண் பணக்காரர்:</strong></h2> <p style="text-align: justify;">கடந்த மார்ச் மாதம் தனது 47 சதவீத பங்குகளை மகள் ரோஷ்னிக்கு சிவ் நாடார் எழுதி வைத்ததன் மூலம இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார். இந்த நிலையில் தான்&nbsp; ரோஷ்னி நாடார் தற்போது ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற பெருமையையும், முதல் பெண் பணக்காரர் என்ற சாதனையையும், இளம் பணக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p>
Read Entire Article