<p>பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. <a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு அணி வீரர்களை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றன.</p>
<p>முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை ஆர்சிபி அணிக்கு வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">VIDEO | Child faints outside Bengaluru's Chinnaswamy Stadium as a massive crowd gathers to celebrate Royal Challengers Bengaluru's IPL 2025 victory. <br /><br />(Full video available on PTI Videos - <a href="https://t.co/n147TvqRQz">https://t.co/n147TvqRQz</a>)' <a href="https://t.co/fFqKswmm3y">pic.twitter.com/fFqKswmm3y</a></p>
— Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1930232586854412467?ref_src=twsrc%5Etfw">June 4, 2025</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களும் படுகாயம் அடைந்தவர்களும் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். </p>
<p> </p>