RCB captain 2025 : கப்பு வருமா? ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்!

10 months ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p> <h2 style="text-align: justify;">ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :&nbsp;</h2> <p style="text-align: justify;">ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் கோப்பைகளை அதிக முறை வென்று பிரபலமாக இருந்தாலும் கோப்பையை வெல்லாமல் ரசிகர்களின் படைபலத்தோடு பிரபலமான அணியாக இருப்பது ஆர்சிபி அணி தான்.&nbsp;</p> <h2 style="text-align: justify;">புதிய கேப்டன் யார்?&nbsp;</h2> <p style="text-align: justify;">கடந்த மூன்று சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக ஃபாப் டூ பிளிஸ்சிஸ் இருந்தார், அவரடி கேப்டன்சியில் பெங்களூரு அணி 2022, 2023, 2024 ஆகிய சீசன்களில் தொடர்ந்து மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. அதுவும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற நிலையில் கடைசி 7 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.&nbsp;</p> <p style="text-align: justify;">அதனால் இந்த சீசனில் டூ பிளிஸ்சிஸ் மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கவில்லை. டூ பிளிஸ்சிஸிற்கு 40 வயது ஆகுவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் கேப்டனை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கபட்டுள்ளார்.</p>
Read Entire Article