Rabies: ரேபிஸ் கண்டறியப்பட்டால் 100% மரணம்; தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்

9 months ago 12
ARTICLE AD
<p>இதுகுறித்துப் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:</p> <p>நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் நலம் பேணுபவர்களா நீங்கள்???</p> <p>தெருநாய்களுக்கு நேரடியாக தங்களின் கரங்களில் உணவு புகட்டி வருகிறீர்களா?</p> <p>தெருநாய்கள், பூனைகளை தொட்டுத் தூக்கி அதன் நலம் பேணி வருகிறீர்களா?</p> <p>தயவு கூர்ந்து முன்கூட்டிய ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சையைப் (PRE EXPOSURE PROPHYLAXIS) பெற்றுக் கொள்வது நல்லது.</p> <h2><strong>என்ன காரணம்?</strong></h2> <p>நாய் உள்ளிட்ட விலங்குகளைத் தூக்கும்போது அவை எப்போது கடிக்கும்?</p> <p>எப்போது பிறாண்டி வைக்கும்? என்பதைக் கணிக்கவோ கண்டுகொள்ளவோ இயலாது.</p> <p>சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரர் - நாய்க்குட்டியை சாக்கடையில் இருந்து மீட்டபோது நாய் கடித்தும் அதை கவனிக்காமல் விட்டதால் ரேபிஸ் வந்து இறந்திருக்கிறார்.</p> <p>நாள்தோறும் கல்லூரி மாணவ மாணவிகளும், ஏரியா மக்களும் தெரு நாய்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி கையில் பிஸ்கட் வைத்துப் புகட்டுவதையும் பார்க்க முடிகிறது.&nbsp; இவர்கள் அனைவரும் தயவு கூர்ந்து முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது நல்லது.</p> <p>அரசு மருத்துவமனைகளில் &nbsp;நாய்க்கடித்த பின் ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்சை (POST EXPOSURE PROPHYLAXIS ) இலவசமாகக் கிடைக்கிறது.</p> <p>எனினும் &nbsp;விலங்கு நல மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல ஆர்வலர்களுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசிகளை அவர்கள் பெற விரும்பினால் அரசு மருத்துவமனைகளிலும் அதைப் போட்டுக் கொள்ளலாம். அல்லது தனியாரில் இந்தத் தடுப்பூசி டோஸ் ₹400-க்கு விற்கிறது.</p> <p><br /><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/08/93300b44afcf5ec14bba4d74cef42fe91694153966427780_original.jpg" /></p> <h2><strong>முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியின் அட்டவணை இதோ</strong></h2> <p>முதல் ஊசி ( 0 நாள்)</p> <p>இரண்டாவது ஊசி ( 3வது நாள்)</p> <p>மூன்றாவது ஊசியை ( 21வது நாள் அல்லது 28வது நாள் போட்டுக் கொள்ள வேண்டும்)</p> <p>ஒருமுறை இந்த முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பு அட்டவணைப்படி ஊசி போட்டவர்களை நாய் கடித்தால் அவர்கள் இரண்டு நாட்கள் ( 0 நாள் மற்றும் மூன்றாவது நாள்) மட்டும் ரேபிஸ் தடுப்பூசி பெற்றால் போதும். இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை.</p> <p>அனைவருக்குமே முன்கூட்டிய தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்க இயலாது.&nbsp; காரணம் அவ்வாறு வழங்கினால் நாய்கடித்த பின் வழங்கும் ரேபிஸ் தடுப்பூசிகள் சரியான முறையில் கிடைக்காமல் போகும்.</p> <p>அதற்குப் பதிலாக&nbsp; மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இணைந்து அந்தப் பகுதி நாய்களுக்கு &nbsp;ஒருசேர கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது மிகவும் சிறந்த வழியாகப் படுகிறது.</p> <h2><strong> முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி</strong></h2> <p>நீங்கள் நாய்/ பூனை உள்ளிட்ட விலங்குகளை குறிப்பாக தெருநாய்களை அடிக்கடி தொட்டு உணவு வழங்குபவராக இருப்பின் முறைப்படி முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது நல்லது.</p> <p>நாய் கடித்தாலும் பிறாண்டினாலும் &nbsp;கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.</p> <p>ரேபிஸ் கண்டறியப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 100% மரணம் உறுதி.</p> <p>ரேபிஸ் வைரஸ் நாயிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ லேசான கடி போதுமானது.</p> <p>கடித்த இடத்தை முதலில் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது மருத்துவரிடம் காட்டுவதற்கு உதவும்.</p> <p>பிறகு கடித்த இடத்தை நன்றாக ஓடும் குழாய் நீரில் சோப் போட்டு பதினைந்து நிமிடங்கள் தேய்த்துக் கழுவ வேண்டும்.</p> <p>அதற்குப் பிறகு டெட்டானஸ் தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.</p> <p>கடித்த இடத்தில் சிறு துளி ரத்தம் பார்த்தாலும் கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.</p> <p>ரேபிஸ் தடுப்பூசியால் தவிர்க்கக் கூடிய நோய். எனவே எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இன்னுயிர்களைக் காப்போம்&rsquo;&rsquo; என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/why-do-white-teeth-turn-yellow-227862" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article