<p>New Criminal Laws: வரலாற்று நடவடிக்கையாக நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.</p>
<h2><strong>அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்:</strong></h2>
<p>ஒரு முக்கிய நடவடிக்கையாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை காலனித்துவ கால சட்டங்களை மாற்றியமைத்து, குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை ஏற்படுத்துகின்றன. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவை முறையே இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை, அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் ஆகும்.</p>
<p>புதிய சட்டங்கள் இந்தியாவின் நீதி அமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீரோ எஃப்ஐஆர், ஆன்லைனிலேயே காவல்துறையிடம் புகார்களை பதிவு செய்தல் மற்றும் மின்னணு சம்மன்கள் போன்ற விதிகளை உள்ளடக்கியது. "இந்தச் சட்டங்கள் சமகால சமூக உண்மைகள் மற்றும் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள லட்சியங்களை பிரதிபலிக்கும் வழிமுறைகளை உறுதிப்படுத்துகிறது" என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>