<p>வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவடைந்துள்ளது.</p>
<h2><strong>இன்றே உருவாகும் மோன்தா புயல்:</strong></h2>
<p>இந்த நிலையில், நாளை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல் இன்றே உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தற்போது 790 கி.மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/10/26/41d7be80285c55936c2f0698fb4efd1f1761456692744102_original.jpg" width="744" height="419" /></p>
<p>ஆந்திரா நோக்கி மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று மாலை 5 மணிக்கு மேல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோன்தா புயல் ஆந்திராவின் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. </p>
<p> </p>