<p>இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. </p>
<p>கடந்த 2022-ம் ஆம் ஆண்டு எக்ஸ் (X Formerly Known as Twitter) என்ற சமூக வலைதளத்திற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட ‘கூ’ என்ற நிறுவனம் தற்போது முதலீடு தொடர்பான சிக்கல் காரணமாக தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. </p>
<p>இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அபர்மேய ராதாகிருஷ்ணா வெளியிட்டுள்ள தகவலில், “ மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை ஆராய்ந்தோம். ஆனால், பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. ’கூ’ செயலி தொடர்ந்து செயல்பட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான வழிகள் ஏதுமில்லை. மிகவும் வருத்ததுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.”என்று தெரிவித்துள்ளார். </p>
<hr />
<p> </p>