IND vs SA 2nd ODI: மீண்டும் முதலில் பேட் செய்யும் இந்தியா..? ரோ-கோ மேஜிக் இருக்கா? கலக்குமா தென்னாப்பிரிக்கா?

1 week ago 3
ARTICLE AD
<p>IND vs SA 2nd ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று சத்தீஸ்கரில் நடக்கிறது. ராய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் 1-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் போட்டியில் நீடிக்கும்.&nbsp;</p> <h2><strong>இந்தியா முதலில் பேட்டிங்:</strong></h2> <p>இந்த பரபரப்பான சூழலில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடர்ச்சியாக 20வது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளது.&nbsp;</p> <p>முதல் போட்டியில் சேசிங்கைத் தேர்வு செய்து தோல்வி அடைந்தாலும், இந்த போட்டியிலும் மீண்டும் சேசிங்கையே தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு பக்கபலமாக அந்த அணியின் கேப்டன் பவுமா அணிக்கு திரும்பியுள்ளார்.&nbsp;</p> <h2><strong>பலமான பேட்டிங்:</strong></h2> <p>கடந்த போட்டியில் களமிறங்கிய அதே இந்திய அணியே இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் பேட்டிங் பலமாக ரோகித் சர்மா, விராட் கோலி. கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளனர். இளம் வீரர் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை காட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ருதுராஜ் இந்த போட்டியில் ஜொலிக்க வேண்டியது அவசியம் ஆகும்.&nbsp;</p> <p>வாஷிங்டன் சுந்தர் சுழல் மற்றும் பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும். கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்த நிலையில், அதே பந்துவீச்சு பட்டாளத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.</p> <p>தென்னாப்பிரிக்க அணிக்கு பக்கபலமாக கேப்டன் பவுமாவுடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் களமிறங்கியுள்ளனர்.&nbsp;</p>
Read Entire Article