IND vs PAK T20 World Cup 2024: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!?

1 year ago 6
ARTICLE AD
<p><strong>IND vs PAK T20 World Cup 2024:</strong>&nbsp;உலகமே எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பையானது இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. அதிலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&nbsp;</p> <p>மற்ற நாடுகளை போன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியாக எந்த தொடரிலும் விளையாடுவது கிடையாது. கடைசியாக இந்த இரண்டு நாடுகளும் 2013ம் ஆண்டு இந்தியாவில் தொடரை விளையாடியது. இதன்பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலும், ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி மற்றும் ஆசியக் கோப்பைகள் போன்ற முக்கிய போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன. அந்த போட்டிகளிலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறும்.&nbsp;</p> <h2><strong>டி20 உலகக் கோப்பை 2024:&nbsp;</strong></h2> <p>இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வருகின்ற ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து ஒரு அச்சம் தரக்கூடிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p> <h2><strong>பலத்த போலீஸ் பாதுகாப்பு:&nbsp;</strong></h2> <p>இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இருந்தாலும், இந்த தீவிரவாத தாக்குதல் செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, நாசாவ் கவுண்டி போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்ததாக உறுதி செய்தார்.&nbsp;</p> <h2><strong>நியூயார்க் ஆளுநர் விளக்கம்:&nbsp;</strong></h2> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">In preparation for the <a href="https://twitter.com/cricketworldcup?ref_src=twsrc%5Etfw">@cricketworldcup</a>, my team has been working with federal &amp; local law enforcement to keep attendees safe.<br /><br />While there is no credible threat at this time, I&rsquo;ve directed <a href="https://twitter.com/nyspolice?ref_src=twsrc%5Etfw">@nyspolice</a> to elevate security measures &amp; we&rsquo;ll continue to monitor as the event nears.</p> &mdash; Governor Kathy Hochul (@GovKathyHochul) <a href="https://twitter.com/GovKathyHochul/status/1795887998527057969?ref_src=twsrc%5Etfw">May 29, 2024</a></blockquote> <p><strong> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </strong></p> <p>இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், &rdquo;கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாதுகாப்பு பணியில் எங்களது பாதுகாப்பு குழு மற்றும் சட்ட அதிகாரிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்&rdquo; என தெரிவித்திருந்தார்.&nbsp;</p> <p>2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தங்கள் போட்டியை பெரும்பாலும் நியூயார்க் நகரத்தில் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. வருகின்ற ஜூன் 1ம் தேதி இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. &nbsp;இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் நியூயார்க் நகரத்தில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மட்டுமே நடைபெறுகிறது.&nbsp;</p>
Read Entire Article