<p>சீனாவில் உருவான HMPV வைரஸ், இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் பரவி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>குறிப்பாக சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>
<p>இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p>