<p>குரூப் 4 கலந்தாய்வு எந்த வரிசையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) கூறி உள்ளதாவது:</p>
<p><strong>''ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4-ன் பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு எந்த வரிசையாக நடைபெறும்‌?</strong></p>
<p>பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு கீழ்க்கண்ட வரிசையில்‌ நடைபெறும்‌.</p>
<p>1. இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ கிராம நிர்வாக அலுவலர்‌</p>
<p>2. தட்டச்சர்‌</p>
<p>3. சுருக்கெழுத்து தட்டச்சர்‌</p>
<p><strong>உடற்தகுதித்‌ தேர்வு மற்றும்‌ நடைச் சோதனை</strong></p>
<p>4. வனக்காப்பாளர்‌ மற்றும்‌ ஓட்டுநர்‌ உரிமத்துடன்‌ கூடிய வனக்காப்பாளர்‌</p>
<p>5. வனக்காவலர்‌ மற்றும்‌ வனக்காவலர்‌ (பழங்குடியின இளைஞர்‌)''</p>
<p>இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.</p>