DMK: ”தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர் முயற்சிக்கிறாரா?” ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக; நடந்தது என்ன?

11 months ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.&nbsp;</p> <p>பாஜக அல்லாத மாநிலங்களில் , தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.&nbsp;</p> <p>மத்திய அரசின் ஏஜென்டாக , தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் அத்துமீறுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p> <p>மத்திய அரசு மீதான மக்கள் கோபத்தை திசைத்திருப்பும் பாஜக -அதிமுக கள்ளக்கூட்டணியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>திமுக தரப்பு தெரிவிப்பதாவது, &ldquo;தமிழ்நாட்டின் மரபுப்படி , முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அடுத்து ஆளுநர் உரை இறுதியில் தேசிய கீதம் இயற்றப்படும்; ஆனால் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என மரபுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p> <p>இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/awards-won-by-ar-rahman-211952" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article