<p>”திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம்;என் மீது கை வைக்கலா.” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p>கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தல் முடிவுகள், அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி பேசியுள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி. வேலுமணியில் கருத்திற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.</p>
<p>தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பார்க்கப்படும் மற்றொரு கட்சியான அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. மேலும், அதிமுக தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. </p>
<p>மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ பாஜக கூட்டணியில் இருந்தபோது அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அதிகமாக பேசியது அண்ணாமலைதான்.” என்று தெரிவித்துள்ளார். </p>
<p><strong>அண்ணாமலை பதில்:</strong></p>
<p>இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளத்துள்ள அண்ணாமலை,” எடப்பாடி பழனிசாமி வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதுதான் தேர்தல் தரும் பாடம்.” என்று குறிப்பிட்டுள்ளார். </p>
<hr />
<p> </p>