Beautiful Wife - Astrology: அழகான மனைவி அமைய வேண்டுமா..! ஜோதிடம் கூறுவது என்ன?

1 year ago 7
ARTICLE AD
<p><strong>அழகான மனைவி அமைய மகாலட்சுமி வழிபாடு!!!</strong></p> <p>அன்பார்ந்த abp வாசகர்களே&nbsp; எல்லோருக்கும் மனைவி அழகாக இருக்க வேண்டும்&nbsp; என்று ஆசை உண்டு&nbsp; அதிலும் சிலருக்கு மனைவி நல்ல குணத்தோடு தான் இருக்க வேண்டும் அழகு எல்லாம் முக்கியமில்லை என்று சொல்பவர்களும் உண்டு.&nbsp;&nbsp; இருக்கட்டும்&nbsp; பூமியில் பிறந்த அத்தனை பெண்களுமே அழகு தான்.&nbsp;&nbsp; இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p> <p>&nbsp; ஒரு பெண்&nbsp; எப்படி தோற்றம் அளிக்கிறார் என்பது அவரவர் பார்வையில் தான்&nbsp; இருக்கின்றதே தவிர&nbsp; மற்றபடி,&nbsp; அனைத்து பெண்களுமே மகாலட்சுமி வடிவம்தான்,&nbsp;&nbsp; அனைத்து பெண்களுமே சக்தியின் வடிவம் தான்.&nbsp;&nbsp; ஒரு மனிதன்&nbsp; பெண்ணை&nbsp; சக்தியின் வடிவமாக பாவித்து வணங்க ஆரம்பித்து விட்டால் அவன் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது.&nbsp;&nbsp; கோயிலுக்கு சென்று&nbsp; அம்மன் காலில் விழுவதும்&nbsp; வீட்டில் இருக்கக்கூடிய நம்மை பெற்றெடுத்த தாயின் காலில் விழுவதும்&nbsp; ஒன்றுதான்.&nbsp; தாய்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை&nbsp; என்ற சொல் இருக்கிறது&nbsp; சரி&nbsp; பிறகு எதற்கு&nbsp; அழகான மனைவி அமைய மகாலட்சுமி வழிபாடு என்ற தலைப்பு.</p> <p>சுரூபம் என்ற ஒரு வார்த்தை உண்டு&nbsp; ஒரு ஆள் பார்ப்பதற்கு எப்படி தோற்றமளிக்கிறார் என்பது&nbsp; தோற்றத்தை வைத்து மட்டும் ஒரு மனிதனிடம் நாம் பழகி விட முடியாது அல்லவா&nbsp; அவர்களுடைய உள்ளமும்&nbsp; அழகாக இருக்க வேண்டும் அதைத்தான் நான் தற்போது சொல்ல வருகிறேன்....&nbsp; பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி&nbsp; எப்பொழுதும் அவருக்கு&nbsp; பணிவிடை செய்பவராகவும்&nbsp; பூமியின் செல்வத்தை பாதுகாப்பவராகவும்&nbsp; தன்னை நாடி வருவோருக்கு&nbsp; செல்வங்களை அள்ளி வழங்குபவராகவும் இருக்கிறார்.</p> <p>&nbsp;</p> <p>தன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்ற&nbsp;&nbsp; கர்வம்&nbsp; சிறிதளவு&nbsp; நம் தாயார் மகாலட்சுமி இடம் இல்லை.&nbsp;&nbsp; வெள்ளிக்கிழமை தோறும்&nbsp; பெண்கள் விரதம் இருந்து&nbsp; பிடித்த&nbsp; தெய்வத்திற்கு குறிப்பாக பெண் தெய்வத்திற்கு மனதார பூஜை செய்து வந்தால் அவர்களுக்கு மனம் விரும்பிய மாங்கல்யம் உண்டாகும் என்பது தான்&nbsp; சாஸ்திரம் கூறும் உண்மை.&nbsp; ஏன் வெள்ளிக்கிழமை?&nbsp;&nbsp; என்றால்&nbsp; திங்கள்&nbsp; சந்திரனின் ஆதிக்கத்தைக் கொண்ட தினம்,&nbsp; &nbsp;செவ்வாய்க்கிழமை&nbsp; அங்காரகனின் ஆதிக்கத்தை கொண்ட தினம்&nbsp; இப்படியாக ஒவ்வொரு தினத்திலும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கம் உள்ளது அதேபோல தான்&nbsp; வெள்ளிக்கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது....</p> <p>&nbsp; <strong>ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்&nbsp; தான் மனைவி:</strong></p> <p>எந்த ஒரு&nbsp; ஆண் ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும்&nbsp; உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்&nbsp; அவர்களுடைய சுக்கிரனின் வலிமையை வைத்து தான் அவர்களுக்கு அமையவிருக்கின்ற மனைவியின் வலிமையை கணக்கிடுவார்கள்.&nbsp; சுக்கிரன் 12 ராசிகளில் எந்த வீட்டில் அமர்க்கிறாரோ&nbsp; அந்த வீட்டின் சக்தியை தான்&nbsp; உங்களுக்கு வரக்கூடிய மனைவி பிரதிபலிப்பார்&nbsp; உங்களுக்கு சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால்&nbsp; ஆயுள் உள்ளம் கொண்டது அதில் எந்த மாற்றுக் கருத்தும்&nbsp; இல்லை மற்றவர்களை பாதுகாப்பதில் வல்லவர் இப்படியாக நீங்கள் வாங்கி வந்த விதியின் அடிப்படையில்&nbsp; நிச்சயமாக&nbsp; உங்களின் சுக்கிரன் 12 ராசிகளில் ஒரு வீட்டில் அமர்ந்து உங்களுக்கான பலனை கொண்டு வந்து கொடுப்பார்.....</p> <p>&nbsp;</p> <p>&nbsp;&nbsp;&nbsp; சுக்கிரன் தான் மனைவி என்று கூறிவிட்டேன்.&nbsp;&nbsp; அதை சுக்கிரனின் ஆதிக்கத்தை கொண்ட தினம் வெள்ளிக்கிழமை என்றும் சொல்லிவிட்டேன்,&nbsp;&nbsp; வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்&nbsp; அல்லது சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி என்றும்&nbsp; கூறலாம்.&nbsp;&nbsp; அப்படியானால் நேரடியான சுக்கிரனின் தொடர்பு மகாலட்சுமிக்கு உள்ளதால் நீங்கள்&nbsp; சுக்கிரன் என்கிற மனைவி&nbsp; தோற்றத்தில் அழகாகவும் உள்ளத்தில் அழகாகவும்&nbsp; உங்களுக்கு அமைய&nbsp;&nbsp;மகாலட்சுமியே வழிபடுவது.</p> <p>&nbsp;</p> <p>&nbsp; தற்போது இருக்கும் நவீன உலகில் ஆண்கள் வேகமாக செயல்படுகிறார்கள்&nbsp; நாளைக்கு பெரிய அளவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.&nbsp;&nbsp; அடுத்த நாளே கோடீஸ்வரராக வேண்டுமென்றும் எண்ணம் இருக்கிறது அதற்காக பங்குச்சந்தையில் ஆரம்பித்து&nbsp; பல நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடங்கி&nbsp; புதிய வியாபாரம் தொழில் என்று அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்கிறார்&nbsp; அது மறுப்பதற்கு இல்லை.&nbsp;&nbsp; ஆனால் ஒருவரிடம் செல்வம் சேர வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் மகாலட்சுமியின் அம்சம் காரணம்&nbsp;&nbsp; அழகான என்ற சொல்&nbsp; மகாலட்சுமியிடம் இருக்கிறது.&nbsp; &nbsp;சுத்தமாக இருக்க வேண்டும்&nbsp; வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்&nbsp; இப்படி&nbsp; தூய்மையான இடத்தில் மகாலட்சுமி நிச்சயம்&nbsp; வாசம் செய்வர்.&nbsp;&nbsp; ஆகையால் தான் அந்த காலத்தில் வீடு முழுவதும் சாணம் தெளித்து&nbsp; மஞ்சள்&nbsp; கரைத்து அதை வீடு முழுவதும் பூசி&nbsp; அவர்கள் மீதும்&nbsp; பூசி அவர்களையும் சுத்தமாகவும் வீட்டையும் சுத்தமாகவும் வைத்திருப்பார்கள் அந்த காலத்திலும் தாய்மார்கள் அதனால் தான் நம்முடைய&nbsp; சந்ததிகள் இன்று ஓரளவுக்கு நன்றாக இருக்கிறார்கள் என்று கூறலாம்.</p> <p>&nbsp;</p> <p>&nbsp; நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வணங்க வேண்டும் என்பது இல்லை&nbsp; மனம் ஆகாத ஆண்கள்&nbsp; வயதிற்கு வந்த பெண்களை&nbsp; துன்புறுத்துவதோ கஷ்டப்படுத்துவதோ மனரீதியாக தொல்லை கொடுப்பது போன்ற காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது அது உங்கள் சகோதரியாக இருக்கலாம்&nbsp; தெரிந்த பெண்ணாக இருக்கலாம் தோழியாக இருக்கலாம்&nbsp; அவர்களை மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் பார்த்துக் கொள்வது உங்களின் கடமை&nbsp; அப்படி செய்யும் பட்சத்தில் மகாலட்சுமி அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு.</p> <p>&nbsp;</p> <p>&nbsp; வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய&nbsp;&nbsp; சுமங்கலி பெண்களுக்கு புடவை வாங்கி கொடுக்கலாம்.&nbsp;&nbsp; வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.&nbsp;&nbsp; அவர்களின் மனதை மகிழ்விக்கலாம்.&nbsp;&nbsp; இப்படி செய்யும்போது மகாலட்சுமி அனுக்கிரகம் நமக்கு உண்டு&nbsp; மொத்தத்தில்&nbsp; பெண் இனத்தை நாம் தெய்வமாக வழிபடும் பொழுது&nbsp; நம்முடைய சந்ததிகள் முழுவதுமாக&nbsp; செல்வ செழிப்போடு வாழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.&nbsp;&nbsp;திருமணத்திற்காக வரம் தேடிக் கொண்டிருக்கும் ஆண்கள் மேலே சொன்னவற்றை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.&nbsp;&nbsp; வெள்ளிக்கிழமை தோறும்&nbsp; மகாலட்சுமி&nbsp; விரதம் இருக்க வேண்டும் என்று இல்லை&nbsp; ஆனால் மனதார தெய்வத்தை வழிபட்டு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும்&nbsp; நமக்கான பெண் நம்மிடம் வந்ததற்கு பின்பாக நம் வாழ்க்கை மேலே செல்ல வேண்டும்&nbsp; என்பதாகத்தான் இருக்க வேண்டும்.&nbsp;&nbsp; நிச்சயமாக&nbsp; உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்கள்.</p> <p><strong>குறிப்பு: <em>இந்த தகவலானது, ஜோதிடரின் தனிப்பட்ட கருத்தாகும்,&nbsp; ஏபிபி நாடுவின் கருத்தல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.&nbsp;</em></strong></p>
Read Entire Article