Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!

11 months ago 7
ARTICLE AD
<p>அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.</p> <p>பல்கலைக்கழகங்களில்&zwnj; மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்&zwnj;, மாணவ மாணவிகளின்&zwnj; பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை&nbsp;நடவடிக்கைகள்&zwnj; மற்றும்&zwnj; பல்கலைக்கழகங்களின்&zwnj; செயல்பாடுகள்&zwnj; குறித்த ஆய்வுக்&zwnj; கூட்டம்&zwnj; உயர்கல்வித்&zwnj; துறை அமைச்சர்&zwnj; முனைவர்&zwnj; கோவி. செழியன்&zwnj; தலைமையில்&zwnj; இன்று (07.01.2025) நாமக்கல்&zwnj; கவிஞர்&zwnj; மாளிகையில்&zwnj; நடைபெற்றது.</p> <p><strong>இக்கூட்டத்தில்&zwnj; அமைச்சர்&zwnj; தெரிவித்ததாவது:</strong></p> <p>தமிழ்நாடு முதலமைச்சர்&zwnj; இந்திய அளவில்&zwnj; உயர்கல்வியில்&zwnj; தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும்&zwnj; வகையில்&zwnj; சீரிய திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள்&zwnj;. மாணவ மாணவிகளின்&zwnj; கல்வித்&zwnj; தரம்&zwnj; உயர வேண்டும்&zwnj;, மாணவ மாணவிகள்&zwnj; கல்வி கற்க பொருளாதாரம்&zwnj; ஒரு தடையாக இருக்கக்&zwnj; கூடாது என்பதை கருத்தில்&zwnj; கொண்டு புதுமைப்&zwnj; பெண்&zwnj;, தமிழ்ப்&zwnj; புதல்வன்&zwnj;, நான்&zwnj; முதல்வன்&zwnj; போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்&zwnj;.</p> <p>இந்திய அளவில்&zwnj; மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில்&zwnj; உயர்கல்வியில்&zwnj; சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும்&zwnj; என்ற எண்ணத்தில்&zwnj; உயர்கல்வித்&zwnj; துறை சார்பில்&zwnj; பல்வேறு முன்னெடுப்புகள்&zwnj; செய்யப்பட்டு வருகிறது.</p> <p>அண்ணா பல்கலைக்கழகத்தில்&zwnj; நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில்&zwnj; துரித நடவடிக்கைகள்&zwnj; எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும்&zwnj; அறிந்தே.</p> <p><strong>கூர்நோக்கு பகுதிகளைக் கண்டறிக</strong></p> <p>இதுபோன்ற சம்பவங்கள்&zwnj; எந்தவொரு கல்வி நிறுவனத்திலும்&zwnj;, நிகழாமல்&zwnj; இருப்பதை உறுதி செய்யும்&zwnj; வகையில்&zwnj; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்&zwnj; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி நிறுவனங்களில்&zwnj; இரவு நேரங்களில்&zwnj; அனைத்து பகுதிகளிலும்&zwnj; மின்விளக்குகள்&zwnj;, கண்காணிப்பு கேமராக்கள்&zwnj; இருப்பதை&nbsp;உறுதி செய்ய வேண்டும்&zwnj;. குறிப்பாக கூர்நோக்கு பகுதிகள்&zwnj; கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள்&zwnj; மற்றும்&zwnj; கண்காணிப்பு கேமராக்கள்&zwnj; அமைக்கப்பட வேண்டும்&zwnj;.</p> <p><strong>&nbsp;கட்டாய அடையாள அட்டை</strong></p> <p>கல்வி நிறுவன வாளகத்திற்குள்&zwnj; உள்&zwnj; நுழைபவர்கள்&zwnj; மற்றும்&zwnj; வெளியே செல்பவர்களின்&zwnj; தகவல்கள்&zwnj; பதிவேட்டில்&zwnj; பராமரிக்கப்பட வேண்டும்&zwnj;. வளாகத்திற்குள்&zwnj; கண்டிப்பாக மாணவர்கள்&zwnj; பேராசியர்கள்&zwnj;, பணியாளர்கள்&zwnj; அனைவரும்&zwnj; அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்&zwnj;. அவசர காலங்களில்&zwnj; உதவும்&zwnj; வகையில்&zwnj; தமிழ்நாடு காவல்&zwnj; துறையால்&zwnj; உருவாக்கப்பட்டுள்ள "காவல்&zwnj; உதவி" செயலியின்&zwnj; பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்&zwnj;.</p> <p>கல்வி நிறுவனங்களில்&zwnj; பாதுகாப்பு பணியில்&zwnj; ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள்&zwnj; இரவு நேரங்களில்&zwnj; தொடர்&zwnj; ரோந்து பணியில்&zwnj; ஈடுபட வேண்டும்&zwnj;, பாதுகாப்பு நடவடிக்கைகளில்&zwnj; மாணவ மாணவிகளின்&zwnj; ஆலோசனையினையும்&zwnj; பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும்&zwnj; உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேலும்&zwnj; எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்&zwnj; குறித்தும்&zwnj;, உயர்கல்வித்&zwnj; துறையை மேலும்&zwnj; செம்மைப்படுத்தவும்&zwnj; பதிவாளர்களின்&zwnj; ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அமைச்சர் செழியன் தெரிவித்தார்&zwnj;.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/hollywood-favorite-movie-jurassic-park-some-made-facts-211980" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article