<p>சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. </p>
<p>கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”. மலிவு விலையில் 3 நேர உணவுகள் கிடைத்ததால் ஏழை, எளிய மக்கள், ஊரை விட்டு வந்து வேலை தேடுபவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவகள் என அனைவருக்கும் அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாக அமைந்தது. இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். </p>
<p>இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களை தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p>
<p>சேதமடைந்த உணவக கட்டங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவாக்குவதுடன் மட்டுமல்லாமல் அம்மா உணவகத்தில் இருக்கும் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்றவும் மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். </p>