<p>ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.</p>
<p>ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024- 25ம் கல்வியாண்டில் இருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.</p>
<p>என்ஐஆர்எஃப் தரவரிசையில் நாட்டிலேயே நம்பர் ஒன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>மாணவர் சேர்க்கை எப்படி?</strong></p>
<p>ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது. </p>