"ADகளில் குழந்தைகளை நடிக்க வைக்காதீங்க" ஆன்லைன் விளையாட்டுகளில் Risk.. ரூல்ஸ் போட்ட மத்திய அரசு!

1 year ago 8
ARTICLE AD
<p>ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க,&nbsp;மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு,&nbsp;தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021&nbsp;என்பதை வகுத்தது.</p> <p>தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தலும் இதில் அடங்கும்.</p> <p><strong>ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகள்:</strong></p> <p>மேலும், ஆன்லைன் விளையாட்டு குறைபாடுகளை சமாளிப்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி, குழந்தைகளின் பாதுகாப்பான ஆன்லைன் விளையாட்டு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையை வழங்கியது.</p> <p>அதன்படி, எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.&nbsp;</p> <p>இதுபோன்ற ஒவ்வொரு விளம்பரமும் இந்திய விளம்பர தரநிலைக் கவுன்சில் விதிமுறைக்கு ஏற்ப அச்சு மற்றும் ஆடியோ/வீடியோ விளம்பரங்களில் இந்த விளையாட்டு நிதி இழப்பு ஆபத்தை உள்ளடக்கியது என்று தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.&nbsp;</p> <p><strong>"வெற்றிகரமானவராக சித்தரிக்கக்கூடாது"</strong></p> <p>விளம்பரங்கள், தங்கள் விளையாட்டுகளை மாற்று வேலை வாய்ப்பாகக் காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.</p> <p>மற்றவர்களுடன் ஒப்பிடும்போது விளையாட்டு செயல்பாட்டை எந்த வகையிலும் செய்பவர் மிகவும் வெற்றிகரமானவராக சித்தரிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.</p> <p>ஆன்லைன் பந்தய தளங்கள் மற்றும்/அல்லது இந்த தளங்களை பினாமி முறையில் சித்தரிக்கும் எந்தவொரு தயாரிப்பு/சேவையின் விளம்பரங்களையும் வெளியிடுவதையும்,&nbsp;ஒளிபரப்புவதையும் தவிர்ப்பதற்காக,&nbsp;சமூக ஊடக தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு&nbsp;21&nbsp;மார்ச்&nbsp;2024&nbsp;தேதியிட்ட அறிவுரையை தகவல் ஒலிபரப்பு&nbsp; அமைச்சகம் வெளியிட்டுள்ளது.</p> <p>ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது,&nbsp;இது சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஒரு கட்டமைப்பையும் சூழல் அமைப்பையும் வழங்குகிறது. ஒருங்கிணைந்த முறையில். அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் பொதுமக்கள் புகாரளிக்க,&nbsp;தேசிய சைபர் கிரைம்&nbsp; போர்ட்டலை (https://cybercrime.gov.in) MHA&nbsp;அறிமுகப்படுத்தியுள்ளது.&nbsp; இணையப் புகார்களைத் தெரிவிக்கும் வகையில், &lsquo;1930&rsquo;&nbsp;என்ற கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p> <p>மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்&nbsp; ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article