<p>நடிகர் அல்லு அர்ஜூனுக்கு , எதற்காக கைது செய்யப்பட்டார்? எதற்காக 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். </p>
<p><strong>அல்லு அர்ஜூன் திரைப்பட சர்ச்சை:</strong></p>
<p>அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெளியானது. தமிழ் , இந்தி, தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்ததது. </p>
<p>ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அங்கு அல்லு அர்ஜூன் திடீர் வருகை தந்தார். </p>
<p>அப்போது அல்லு அர்ஜூனை காண ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது, அப்போது ஏற்ப்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்கிற பெண்மணியும் அவரது 9 வயது மகனும் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டனர், அதில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்த அவரது மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p>
<p><strong>வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜூன்:</strong></p>
<p>இந்த சம்பவம் நடந்த இரு நாட்கள் கழிந்து அல்லு அர்ஜூன் தனது வருத்தத்தை வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். உயிரிழிந்த பெண்ணின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் கருத்தில் கொண்டு ₹ 25 லட்சம் வழங்குவதாக அவர் கூறினார். துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எந்த உதவிகளையும் செய்ய எங்கள் குழுவானது தயாராக இருக்கிறது என தெர்விக்கப்பட்டது.</p>
<p><strong>14 நாட்கள் நீதிமன்ற காவல்:</strong></p>
<p>கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது ஹைதராபாத் போலீஸ் அல்லு அர்ஜூன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை இன்று காவல் துறை கைது செய்துள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. </p>
<p>இதையடுத்து, அல்லு அர்ஜூனுக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/1000-crore-indian-movies-list-pushpa-2-dangal-baahubali-2-kalki-2898-ad-209520" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p><strong>சோகத்தில் ரசிகர்கள்:</strong></p>
<p>புஷ்பா 2 திரைப்படம் ஆறு நாட்களில் ஆயிரம் கோடி வசூலித்து இந்திய சினிமாவில் சாதனை படைத்துள்ளது. புஷ்பா 2 படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இந்த மகிச்சியை கொண்டாடி வந்தனர். புஷ்பா 2 படத்தின் வெற்றி விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.</p>
<p>ஒருபக்கம் 1000 கோடி வசூலை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு, அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, 12 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . </p>