12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?

4 months ago 5
ARTICLE AD
<p>2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு கடந்த ஜூன்&zwnj; மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம்&zwnj; ஆண்டு மற்றும்&zwnj; பிளஸ் 1 அரியர் (மார்ச்&zwnj; 2025 பருவத்திற்கு முந்தைய பருவத்தில்&zwnj; தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்&zwnj;) துணைத்&zwnj; தேர்வெழுதிய தேர்வர்களுக்கு,&zwnj; தேர்வு முடிவுகள் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.</p> <p>இந்த மதிப்பெண்&zwnj; பட்டியலை (Statement Of Marks) மாணவர்கள் தற்போது https://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.&nbsp;</p> <h2><strong>துணைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?</strong></h2> <ul> <li><span style="font-family: 'Nirmala UI',sans-serif;">தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள்&zwnj; செல்லவும்.&nbsp;</span></li> <li><span style="font-family: 'Nirmala UI',sans-serif;">அதில், ரிசல்ட் என்ற வாசகத்தை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும். </span></li> <li><span style="font-family: 'Nirmala UI',sans-serif;">அதில், HSE Second Year Supplementary Exam, Jun / Jul 2025 - Result -Statement Of Marks Download&rsquo; என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும். </span></li> <li><span style="font-family: 'Nirmala UI',sans-serif;">அதில், தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj; என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.</span></li> </ul> <p>அடுத்ததாக, தேவைப்படும் மாணவர்கள் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும்&zwnj; தேர்வர்கள்&zwnj; சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்&zwnj; தேர்வுகள்&zwnj; உதவி இயக்குநர்&zwnj; அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, 28.07.2025 ( திங்கட்கிழமை) மற்றும்&zwnj; 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்&zwnj; காலை 11.00 மணி முதல்&zwnj; மாலை 5 மணி வரை நேரில்&zwnj; சென்று, விண்ணப்பிக்கலாம்.</p> <h2><strong>கட்டணம் எவ்வளவு?</strong></h2> <p><br />ஒவ்வொரு பாடத்திற்கும்&zwnj; ரூ.275,/- கட்டணத்தை பணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்&zwnj;. (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்&zwnj;, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்&zwnj; முதன்மைக் கல்வி அலுவலர்&zwnj; அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்&zwnj; பதிவு செய்துகொள்ளலாம்&zwnj;.)</p> <p>தேர்வர்கள்&nbsp;<a href="https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1753438438.pdf">https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1753438438.pdf </a>&nbsp;என்ற இணைப்பை க்ளிக் செய்து, இதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.&nbsp;</p> <p>அதில் இருந்து மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். எனினும் இதற்கான தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்னும் அறிவிக்கவில்லை.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article