<h2><strong>காவல்துறையினர் சோதனை:</strong></h2>
<p>ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பில், சனிக்கிழமை இரவு, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்காக 40 பெண்கள் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பப்புக்கு போலீசார் சீல் வைத்தனர். </p>
<p>வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும், லாபத்தை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை ஆபாச நடனம் ஆடுவதற்கு இந்த பப் பணியில் அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p>
<p>இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ உதவி ஆணையர் (ஏசிபி) வெங்கட் ரமணா தலைமையிலான காவல்துறைக் குழு, நகரில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பப்பில் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.</p>
<h2><strong>140 பேர் கைது : </strong></h2>
<p>” நேற்று இரவு மதுபான விடுதியில் சோதனை நடத்தியதில், சட்டவிரோத செயல்களுக்காக 100 ஆண்கள் மற்றும் 40 பெண்களை கைது செய்துள்ளோம். மதுபான விடுதிக்கு சீல் வைத்துள்ளோம்," என்று காவல் உதவி ஆணையர் (ACP) வெங்கட் ரமணா தெரிவித்தார்.</p>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Police raided TOS Pub in <a href="https://twitter.com/hashtag/BanjaraHills?src=hash&ref_src=twsrc%5Etfw">#BanjaraHills</a>, arresting 140 individuals, including 42 women, for inappropriate dancing and alleged obscene acts. Management, cashier, and DJ were also detained. Investigations continue as authorities look into the illegal activities. <a href="https://twitter.com/hashtag/Hyderabad?src=hash&ref_src=twsrc%5Etfw">#Hyderabad</a> <a href="https://t.co/ixRiH6KNeY">pic.twitter.com/ixRiH6KNeY</a></p>
— Neelima Eaty (@NeelimaEaty) <a href="https://twitter.com/NeelimaEaty/status/1847515926566228086?ref_src=twsrc%5Etfw">October 19, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>"கைது செய்யப்பட்டவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் பதிவு செய்யப்பட்டவர்களில் பப் உரிமையாளர்கள், பவுன்சர்கள், DJ ஆபரேட்டர்கள் மற்றும் பலர் அடங்குவர்" என காவல்துறை தெரிவித்துள்ளது.</p>
<p>அமலாக்கத்துறை இணை ஆணையர் முகமது குரேஷியின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில், சிலர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. </p>
<p>இந்நிலையில், மதுபான விடுதியில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>