வேலையில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்- உடனே தற்காலிக பட்டச்சான்று வழங்கக் கோரிக்கை!

1 year ago 7
ARTICLE AD
<p>பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தால் வேலை, உயர் கல்வியில்&nbsp;சேர&nbsp;முடியாமல்&nbsp; மாணவர்கள் தவித்து வருவதாகவும் உடனடியாக&nbsp;தற்காலிக&nbsp;பட்டச்&nbsp;சான்று&nbsp;வழங்க&nbsp;வேண்டும் எனவும் பா.ம.க.&nbsp;&nbsp;நிறுவனர்&nbsp; ராமதாஸ்&nbsp;வலியுறுத்தி உள்ளார்.</p> <p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:&nbsp;</p> <p>&rsquo;&rsquo;திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து, 2023 - 24 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் அவர்களுக்கு இன்னும்&nbsp;&nbsp;ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet), தற்காலிக பட்டச் சான்றிதழும் (Provisional Certificate) வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.</p> <h2><strong>&nbsp;இடத்தை&nbsp;இழக்கும்&nbsp;நிலை&nbsp;</strong></h2> <p>பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜூன் 26-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன் பின் இன்றுடன் 54 நாட்கள் நிறைவடைந்து விட்டன.&nbsp;&nbsp;ஆனால், தற்காலிகப் பட்டச்சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாததால், பட்டப்படிப்பு தகுதியின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் இன்னும் வேலைக்கு சேர முடியவில்லை; அதேபோல், உயர்கல்வியில் சேர தகுதி பெற்ற மாணவர்கள் தற்காலிகப் பட்டச் சான்று இல்லாததால் அந்த இடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.</p> <p>தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களில் ஒருங்கிணைந்த&nbsp;&nbsp;மதிப்பெண் சான்றிதழும்,&nbsp;&nbsp;தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.&nbsp;&nbsp;ஆனால், தற்காலிக பட்டச் சான்றிதழை&nbsp;&nbsp;வழங்காதது மட்டுமின்றி, அதற்கான காரணத்தைக் கூட இன்னும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, தற்காலிகப் பட்டச் சான்றிதழை வழங்க இன்னும் ஒரு மாதம்ஆகும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;குறித்த காலத்தில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ் வழங்கும் அடிப்படைப் பணியைக் கூட செய்யாமல், மாணர்களின் எதிர்காலத்துடன்&nbsp;&nbsp;&nbsp;பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.</p> <h2><strong>&nbsp;இது&nbsp;முதல்&nbsp;முறையல்ல</strong></h2> <p>மாணவர்களின் எதிர்காலத்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளையாடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் வரை தற்காலிகப் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை. அதை சுட்டிக்காட்டி 11.11.2023-ம் நாள் நான் அறிக்கை வெளியிட்டதற்கு பிறகுதான் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிக தகுதிச் சான்றுகளை வழங்கியது.&nbsp;&nbsp;அதிலிருந்து கூட பாடம் கற்காமல் நடப்பாண்டிலும் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிப்பதை மன்னிக்க முடியாது.</p> <p>மாணவர்கள் பட்டம் படிப்பதன் நோக்கம் உயர்கல்வி கற்கவும், வேலைகளுக்கு செல்வதற்காகவும்தான்.&nbsp;&nbsp;அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழையும், தற்காலிகப் பட்டச் சான்றிதழையும் வழங்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article