பெங்களூருவில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. பெங்களூரு நகர், சிக்கபள்ளாபுரா, கோலார், துமகூரு, நாம்நகரம், எலகங்கா உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக பெங்களூருவின் முக்கிய பகுதியான எலகங்கா சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழை தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.