”வீட்டில் செல்வம் சேர, TNPSC -UPSC தேர்வுகளில் வெற்றிபெற” - ஜாதகம் கூறுவது என்ன?

1 year ago 7
ARTICLE AD
<p><strong>&nbsp; &ldquo;இதை செய்யுங்கள் வீட்டில் செல்வம் சேரும் &ldquo;</strong></p> <p>அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே&nbsp; உங்களுடைய ஜாதகப்படி 11 ஆம் பாவம் மற்றும் இரண்டாம் பாவம்தான் செல்வம் சேர்க்கும் வழி.&nbsp; ஒருவர் இரண்டாம் பாவத்தை வைத்து தான் அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என்பதை கணிக்க முடியும்.&nbsp; அதேபோல ஒருவர் சம்பாதிக்கும் சொத்துக்களை அவர்&nbsp; எப்படி சேமித்து வைக்கிறார். அவருக்கென்று என்ன சொத்துக்கள் இருக்கிறது? அவருக்கென்று இதுவரை என்ன கிடைத்திருக்கிறது என்பதை பதினோராம் பாவம் தான் முடிவு செய்யும்.&nbsp; அதிகப்படியான சொத்துக்களையும் 11 ஆம் பாவம் தான் முடிவு செய்யும்.</p> <p>&nbsp;இப்படி இருக்கும்போது இரண்டு பதினொன்றைத் தவிர மற்ற பாவங்களும் பணம் வரும் வழியை நிச்சயமாக காட்டும்.&nbsp; ஒருவருக்கு ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் தொழில் வியாபாரம் மூலமாக பண வரவு உண்டாகும்.&nbsp; குறிப்பிட்ட ஒரு நபர்&nbsp; ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்றால் அவருக்கு இரண்டும் தேவையில்லை 11 தேவையில்லை கேது மட்டுமே போதும் லக்னத்திற்கு கேது எந்த பாவத்தில் இருந்தாலும் அவருக்கு நிச்சயமாக ஆன்மீகம் மூலமாக பணம் வரும்.&nbsp; ஒருவர் ஜாதகத்தில் நான்காம் பாவம் சிறப்பாக இருந்து விட்டால் அவர் ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் ஐயோ அல்லது கல்யாண மண்டபத்தையோ கட்டி அதன் மூலம் அவருக்கு வருமானத்தை சேர்த்துக் கொள்வார்.&nbsp; இப்படியாக ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் பாகம் மற்றும் 11ம் பாவத்தை மட்டும் வைத்துவிட்டு அவருக்கு பணம் வரும் வழியை நாம் சேர்க்க முடியாது.</p> <p>&nbsp;வீட்டில் செல்வம் சேர வேண்டுமென்றால் நிச்சயாமாக&nbsp; குரு பகவானின் அனுக்கிரகம் இருக்க வேண்டும்.&nbsp; சுக்கிரன் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் என்றால் குரு பகவான் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.&nbsp; நீங்கள் சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் நிச்சயமாக எளிதாக பல லட்சங்களை சம்பாதித்து விடலாம் அதை வைத்து நல்ல மாளிகையான வீடுகள் வாகனங்கள் போன்றவை உங்களால் வாங்க முடியும்.&nbsp; ஆனால் அதுவே குருவின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் எவ்வளவு கோடி வேண்டும் என்றாலும் சுலபமாக சம்பாதித்து விடலாம். &nbsp;உதாரணத்திற்கு ஏற்கனவே உலகத்தில் ஜெயித்த பணக்காரர்களின் ஜாதகங்களை எடுத்து பார்த்தால் சுக்கிரனை விட குரு மிக பிரம்மாண்ட வளர்ச்சியில் இருப்பார் என்பதை நம்மால் பார்க்க முடியும் .&nbsp; குரு அமர்ந்திருக்கும் வீடு குரு வாங்கியிருக்கும் நட்சத்திரம் இரண்டு 11 அதிபர்களின் நட்சத்திரமாக இருக்கும்.</p> <p>&nbsp;உங்கள் ஜாதகத்தில்&nbsp; லக்கினத்திற்கு குரு எந்த பாவத்தில் இருக்கிறாரோ&nbsp; அந்த பாவத்தை நீங்கள் இயக்கினாலே போதும் உங்களுக்கு கோடிக்கணக்கான பணம் வந்துவிடும்.&nbsp; மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் குரு எந்த பாவத்தில் இருக்கிறாரோ அந்த பாவத்தின் மீது உங்களுக்கு அதிகப்படியான நாட்டம் இருக்கும்.&nbsp; உதாரணத்திற்கு குரு உங்களுக்கு&nbsp; ஆறாம் பாவத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் நிச்சயமாக நீங்கள் <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளை எழுதி அரசு வேலையில் சுலபமாக சேர்ந்து விட முடியும்.&nbsp; அதேபோல குரு&nbsp; எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் கேட்கவே தேவையில்லை மற்றவர்களுடைய சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு தானாகவே வந்து சேர்ந்துவிடும்.&nbsp;</p> <p><strong>&nbsp;குருவை எப்படி இயக்குவது </strong>?</p> <p>&nbsp;குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை மட்டுமல்ல அனைத்து நாட்களுமே தான் நீங்கள்&nbsp; உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோயிலில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவானை சென்று வழிபட்டு வாருங்கள்.&nbsp; செல்வம் செல்வாக்கு மட்டுமல்லாமல் புத்திர பாக்கியம் போன்ற மிகச் சிறப்பான பலன்களை அவர் வாரி வழங்குவார்.&nbsp;</p> <p>ஒருவருக்கு அவர் எதிர்பார்க்காத பணம் மிகப்பெரிய சொத்துக்கள் அல்லது&nbsp; மற்றவர்கள் உழைத்த&nbsp; பணம் போன்றவை உங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குருவை இயக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.&nbsp; குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள்.&nbsp; இப்படியாக குருபகவானின் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது குருவின்&nbsp; மந்திரங்களை சொல்வது குருவுக்கு ஏற்ற மஞ்சள் துணி உடுத்துவது போன்றவை செய்வதன் மூலமாக உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை நீங்கள் இயக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் வருவாயை ஈட்டலாம்.&nbsp;</p> <p><strong>குறிப்பு</strong>: இந்த தகவலானது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடரின் தனிப்பட்ட கருத்தாகும், இது ஏபிபி- நாடு-வின் கருத்தல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.&nbsp;</p>
Read Entire Article