<p style="text-align: left;">எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதம மந்திரியின் திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்குக் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<h3 style="text-align: left;">புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020</h3>
<p style="text-align: left;">புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2020 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. </p>
<p style="text-align: left;">இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்</p>
<ul style="text-align: left;">
<li style="text-align: justify;">இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="text-align: left;">
<li style="text-align: justify;">விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவது.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="text-align: left;">
<li style="text-align: justify;">வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிப்பது.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<h3 style="text-align: left;">மயிலாடுதுறை மாவட்டத்திற்கான விவரங்கள்</h3>
<p style="text-align: left;">மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (தொகுதி 10) தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: left;">மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய வட்டாரங்களில் நெல் ஐ (குறுவை பருவம்) பயிரிடும் 235 வருவாய் கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.</p>
<h3 style="text-align: left;">காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமிய விபரம் </h3>
<p style="text-align: left;">குறுவை நெல் பயிருக்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 37,600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை 2 சதவீத விகிதத்தில் ஏக்கருக்கு ரூ.752 ஆகும்.</p>
<h3 style="text-align: left;">விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் முறை</h3>
<p style="text-align: left;">பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2025 ஆகும்.</p>
<p style="text-align: left;"><strong>கடன் பெறும் விவசாயிகள் :</strong></p>
<p style="text-align: left;">தங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பிரீமியம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.</p>
<p style="text-align: left;"><strong>மற்ற விவசாயிகள்:</strong> தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகிப் பதிவு செய்துகொள்ளலாம்.</p>
<h3 style="text-align: left;">தேவையான ஆவணங்கள்</h3>
<p style="text-align: left;">விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்</p>
<ul style="list-style-type: square; text-align: left;">
<li style="text-align: justify;">முன்மொழிவு விண்ணப்பம்</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: square; text-align: left;">
<li style="text-align: justify;">பதிவு விண்ணப்பம்</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: square; text-align: left;">
<li style="text-align: justify;">கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் (பசலி 1435)</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: square; text-align: left;">
<li style="text-align: justify;">வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல்</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: square; text-align: left;">
<li style="text-align: justify;">ஆதார் அட்டை நகல்</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<h3 style="text-align: left;">முக்கிய குறிப்புகள்</h3>
<ul style="list-style-type: circle; text-align: left;">
<li style="text-align: justify;">காப்பீடு செய்யும்போது, பயிர் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமத்தின் பெயர், புல எண், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: circle; text-align: left;">
<li style="text-align: justify;">பதிவு செய்ததற்கான ரசீதை, பதிவு செய்த இடத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<ul style="list-style-type: circle; text-align: left;">
<li style="text-align: justify;">பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால், காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்துகொள்ளலாம்.</li>
</ul>
<p style="text-align: left;"> </p>
<p style="text-align: left;"><strong>தொடர்புக்கு</strong></p>
<p style="text-align: left;">கூடுதல் விவரங்களுக்கு, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - செல்வம், தொலைபேசி எண் 9790004303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களைப்பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: left;">கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்து, பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. </p>